மீண்டும் கேரளாவுக்கு தமிழக கோழிகள்!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பறவைக் காய்ச்சல் காரணமாக தமிழக கோழிகளுக்கு தடை விதித்திருந்த கேரள அரசு அந்தத் தடையை தளர்த்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் பரவியதைத் தொடர்ந்து தமிழகத்திலிருந்து வாங்கப்படும் கோழிகளுக்கு கேரள அரசு தடை விதித்தது. இதனால் நாமக்கல் மண்டலத்திலிருந்து கேரளாவுக்கு செல்லும் 30 லட்சம் கோழிகள், 50 லட்சம் முட்டைகள் தேக்கமடைந்தன.இதுகுறித்து அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து மாநில கால்நடைத்துறை செயலாளர் பழனிவேலு, கேரள மாநில அதிகாரிகளுடன் தொலைபேசி மூலம் பேச்சு நடத்தினார்.
இதன் எதிரொலியாக, தமிழக கால்நடைத்துறை அதிகாரிகள், நோயற்ற கோழி என்ற சான்றிதழ் தரும் கோழிகளை மட்டும் கேரளாவுக்குள் அனுமதிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இதையடுத்து இன்று காலை முதல் பரிசோதிக்கப்பட்ட கோழிகள், அதிகாரிகளின் சான்றிதழுடன் தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications