துபாய் தமிழ்ச் சங்கத்தில் இசை நிகழ்ச்சி
துபாய்:
துபாய் தமிழ்ச் சங்கம் சார்பில் கர்நாடக இசைக் கலைஞர் ஆர்.சூர்யப்பிரகாஷ் கலந்து கொள்ளும் இசைக் கச்சேரி துபாயில் வரும் 23ம் தேதி நடைபெறுகிறது.
இந்த இசை நிகழ்ச்சி 23ம் தேதி இரவு 7 மணியளவில் பர் துபாயில் உள்ள சிந்தி செரமோனியல் ஹால் அரங்கின் இரண்டாவது தளத்தில் நடைபெறுகிறது.
நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் கலைஞர் சூர்யப்பிரகாஷ் (www.rsuryaprakash.com), பிரபல இசைக் கலைஞர் டி.வி.சங்கரநிாராயணனின் சிஷ்யர் ஆவார். சென்னையில் உள்ள ஸ்ரீகிருஷ்ண கான சபா, இந்திய நுண் கலைக் கழகம் ஆகியவற்றின் விருதுகளை சூர்யப்பிரகாஷ் பெற்றுள்ளார்.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் பல்வேறு கச்சேரிகளை நடத்தியுள்ளார்.
நிகழ்ச்சி தொடர்பான மேல் விவரங்களுக்கு துபாய் தமிழ்ச் சங்கத் தலைவர் சபேசனை, 050 4553834 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அறியலாம்.
நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம், அனைத்துத் தமிழன்பர்களையும் துபாய் தமிழ்ச் சங்கம்அன்புடன் வரவேற்கிறது.
(உங்கள் பகுதிகளின் நிகழ்ச்சிகளையும், பிற சம்பவங்களையும், நீங்கள் எழுதவிரும்பும் எந்த தகவலையும் வாசகர்கள் அனுப்பலாம். அவற்றை இலவசமாய்பிரசுரிக்கத் தயாராய் இருக்கிறது தட்ஸ்தமிழ். தமிழ், ஆங்கிலத்தில் உங்கள்படைப்புகளை இ-மெயில் மூலம் அனுப்பலாம். தமிழில் அனுப்பும்போது நீங்கள்பயன்படுத்தும் font பெயரைக் குறிப்பிடவும்.
அனுப்ப வேண்டிய முகவரி: [email protected])












Click it and Unblock the Notifications