பாலாறு அணை-வேலூர் மாவட்டத்தில் கடையடைப்பு

Subscribe to Oneindia Tamil

வேலூர்:

ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவதை எதிர்த்து வேலூர் மாவட்டம்முழுவதும் இன்று முழுக் கடையடைப்பு நடந்து வருகிறது.

சித்தூர் மாவட்டம் கணேசபுரம் என்ற இடத்தில் பாலாற்றின் குறுக்கே அணை கட்டும்முயற்சிகளில் அம்மாநில அரசு இறங்கியுள்ளது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்புஎழுந்துள்ளது.

அணை கட்டும் முயற்சிகளை ஆந்திர அரசு கைவிடாவிட்டால் உச்சநீதிமன்றத்தில்வழக்கு தொடரப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி வழக்கும்தொடரப்பட்டுள்ளது.

இருப்பினும், இது எங்களது உரிமை, இதை விட்டுக் கொடுக்க மாட்டோம்,அணையைக் கட்டியே தீருவோம் என்று திட்டவட்டமாக அறிவித்து விட்டது ஆந்திரஅரசு.

இந் நிலையில் ஆந்திர அரசைக் கண்டித்து வேலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில்பல்வேறு போராட்டங்கள் நடந்து வந்தன. இன்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின்பேரவை சார்பில் முழுக் கடையடைப்புப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று மாலை 6 மணி வரை கடையடைப்பு நடக்கிறது.

கடையடைப்பு காரணமாக சிறு கடைகள் முதல் பெரிய வர்த்தக நிறுவனங்கள் வரைஅனைத்தும் மூடப்பட்டுள்ளன. வணிகர்களின் போராட்டத்திற்கு ஆதரவாகவழக்கறிஞர்களும் இன்று நீதிமன்றப் புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளனர்.

ஆற்காட்டில் வணிகர்கள் கலந்து கொள்ளும் மாபெரும் கண்டனப் பேரணியும் இன்றுநடைபெறுகிறது. கடையடைப்பு போராட்டத்தையொட்டி போலீஸார் பாதுகாப்புநடவடிக்கைகளை பலப்படுத்தியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+