போலி வாக்காளர்களை நீக்க சாப்ட்வேர் !
சென்னை:
ஒரே வாக்காளரின் பெயர் பல்வேறு இடங்களில் பதிவாகியுள்ளதா என்பதைக் கண்டுபிடிக்க சாப்ட்வேரின்உதவியை நாடியுள்ளது தேர்தல் ஆணையம்.
தேர்தல் ஆணையத்தின் தீவிர கண்காணிப்பையும் மீறி லட்சக்கணக்கில் போலி வாக்காளர்களைச் சேர்த்து திறமைகாட்டி வருகின்றன கரை வேட்டிகள். இந்த போலிகளை நீக்க பலவகையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறதுதேர்தல் ஆணையம்.18 வயதுக்குக் குறைவான சிறுவர், சிறுமிகளை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது, ஒரே வேட்பாளரை பலமுகவரிகள் கொடுத்து பல இடங்களில் பட்டியலில் சேர்ப்பது, செத்துப் போனவர்களின் பெயரில் யாரையாவதுசேர்ப்பது என பல இன்னோவேட்டிவான ஐடியாக்களை பயன்படுத்தி வருகின்றனர் கட்சியினர்.
இதில் ஆளும் கட்சியாக இருக்கும் அதிமுகவோ, அமைச்சர்கள், மாவட்டச் செயலளர்கள் மூலமாக அதிகாரிகளைமிரட்டி கத்தை, கத்தையாக வாக்காளர்களைச் சேர்த்தது. இவ்வாறு கொடுக்கப்பட்ட 19 லட்சம் மனுக்களில் 13லட்சம் மனுக்கள் போலியானவை என்ற கண்டுபிடிக்கப்பட்டு நீக்கப்பட்டன.
இந் நிலையில் மீண்டும் 19 லட்சம் அளவுக்கு புதிய மனுக்கள் வந்துள்ளன. இதிலும் பாதிக்கும் மேற்பட்டவைஅதிமுகவினரால் சேர்க்கப்பட்ட போலி மனுக்கள் என்று திமுக குற்றம் சாட்டியுள்ளது.
இதையடுத்து இந்த போலிகளை நீக்க 6 அதிகாரிகளை அனுப்பி வைத்துள்ளது மத்திய தேர்தல் ஆணையம்.அவர்கள் ஆய்வு செய்து போலிகளை நீக்கி வருகின்றனர்.
இந் நிலையில் ஒரே வேட்பாளர் பல்வேறு முகவரிகளின் கீழ் சேர்க்கப்பட்டதை நீக்க சாப்ட்வேரைஉருவாக்கியுள்ளது தேர்தல் ஆணையம். இந்த சாப்ட்வேர் உதவியுடன் போலிகளை நீக்கும் வேலைதொடங்கியுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கூறியுள்ளார்.
இவர்கள் நீக்கப்பட்ட பின்னர் இறுதி வாக்காளர் பட்டியல் மார்ச் 7ம் தேதி வெளியிடப்படவுள்ளது.