நிகர்நிலை பல்கலைகள்: மாணவர்கள் ஸ்டிரைக்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சிலின் அங்கீகாரம் பெறாத பொறியியல்படிப்புகளை நடத்தி வரும் நிகர்நிலைப் பல்கலைக்கங்களின் அங்கீகாரத்தை ரத்துசெய்யக் கோரி தமிழகம் முழுவதும் இன்று முதல் மாணவர் சங்கத்தினர்காலவரையற்ற வகுப்புப் புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள நிகர்நிலைப் பல்கலைகழகங்கள் நடத்தும் பொறியியல்படிப்புகளுக்கான அங்கீகாரத்தை அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் ரத்துசெய்துள்ளது. இதனால் மாணவர்களின் எதிர்காலம் பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.

இதை எதிர்த்து சென்னையில் சத்யபாமா, எஸ்.ஆர்.எம், காஞ்சி மடத்தின் சங்கராநிகர்நிலைப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்தப்போராட்டத்தில் ஈடுபட்டு,வன்முறையில் இறங்கிய மாணவர்கள் கைது செய்யப்பட்டுசிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் அங்கீகாரம் பெறாத பொறியியல் படிப்புகளை நடத்தி வரும்நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும், கைதானமாணவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி இந்திய மாணவர் சங்கம்,அகில இந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் இன்று முதல் காலவரையற்ற வகுப்புப்புறக்கணிப்புப் போராட்டம் தொடங்கியது.

சென்னை சாஸ்திரி பவன் வளாகத்தில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்நடத்தப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+