தமிழக கோவில்களுக்கு பலத்த பாதுகாப்பு
சென்னை:
காசி சம்பவத்தைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள முக்கியக் கோவில்கள்,வழிபாட்டுத் தலங்களுக்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்துக்களின் புனித தலங்களில் ஒன்றான காசியில், தீவிரவாதிகள் நடத்திய திடீர்வெடிகுண்டுத் தாக்குதலில் 20 பேர் பலியாயினர்.நாட்டையே உலுக்கியுள்ள இந்த சம்பவத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் உள்ளமுக்கிய கோவில்கள், வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி கோவிலுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. திருமலை முதல்திருப்பதி வரையிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வெடிகுண்டுகளைக்கண்டுபிடிக்கும் கருவிகளும் ஆங்காங்கு பொருத்தப்பட்டுள்ளன.
இதேபோல தமிழகம் முழுவதும் உள்ள முக்கியக் கோவில்களிலும் பாதுகாப்புஅதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள முக்கியக் கோவில்களான திருவல்லிக்கேணி பார்த்தசாரதிகோவில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில்,
ராமேஸ்வரம் கோவில், பழனி தண்டாயுதபாணி கோவில், திருச்செந்தூர் முருகன்கோவில், தஞ்சை பெரிய கோவில், திருச்சி மலைக்கோட்டை கோவில்,திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் உள்பட முக்கியக் கோவில்களுக்குபாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், கோவையில் உள்ள முக்கியக்கோவில்கள், முக்கிய இடங்கள் முழுவதும் உள்ள தீவிர பாதுகாப்புபோடப்பட்டுள்ளது.
சென்னை நகரம் ஏற்கனவே பலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ் இருப்பதால்பொதுமக்கள் பீதி அடையத் தேவையில்லை என்று மாநகர காவல்துறை ஆணையர்நடராஜ் தெரிவித்துள்ளார்.