For Daily Alerts
Just In
2 ஆண்டு கலெக்டர்களும் மாற்றப்படுகிறார்கள்!
சென்னை:
ஒரே இடத்தில் 2 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் ஆட்சித் தலைவர்கள்,மாவட்ட மற்றும் கோட்ட வருவாய் அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்படவுள்ளனர்.
சட்டசபைத் தேர்தலையொட்டி, ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும்காவல்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தேர்தல்ஆணையம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. அதன்படி அந்த அதிகாரிகள் மாற்றப்பட்டுவருகிறார்கள்.இந் நிலையில் 2 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றி வரும் மாவட்டஆட்சித் தலைவர்கள், மாவட்ட மற்றும் கோட்ட வருவாய் அதிகாரிகளையும்இடமாற்றம் செய்ய மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்த அதிகாரிகள் தொடர்பான பட்டியல் தயாரிக்கப்பட்டு மத்திய தேர்தல்ஆணையத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஆணையம் ஒப்புதல் கொடுத்தவுடன், மாற்றப்படும் அதிகாரிகள் குறித்த பட்டியல்வெளியாகி உடனடியாக அவர்கள் மாற்றப்படுவார்கள்.
Comments
Story first published: Thursday, March 9, 2006, 5:30 [IST]