தொகுதிகளை பிரிப்பதில் கருணாநிதி பிஸி
சென்னை:
திமுக வேட்பாளர் நேர்காணல் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. கூட்டணிக்கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டிய தொகுதிகள் குறித்த ஆலோசனையில் கருணாநிதிஈடுபடவுள்ளதால் நேர்காணல் ரத்து செய்யப்பட்டு விட்டது.
திமுக சார்பில் போட்டியிட விரும்பி மனு செய்திருப்பவர்களிடம் கருணாநிதிதலைமையிலான தேர்வுக் குழு நேர்காணல் நடத்தி வருகிறது. இதுவரை சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகியமாவட்டங்களுக்கு நேர்காணல் முடிந்துள்ளது.இந் நிலையில் கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் விடுத்துள்ள அறிக்கையில்,14.3.2006 முதல் 20.3.2006 வரை நடைபெறுவதாக இருந்த நேர்காணல்ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகள் முடிவு செய்யப்பட்ட பின்னர் திமுகபோட்டியிடும் தொகுதிகளுக்கான நேர்காணல் நாட்கள் அறிவிக்கப்படும்.
அதே நேரத்தில் ஏற்கனவே அறிவித்தபடி 13ம் தேதியன்று (இன்று) நேர்காணல்நடைபெறும் என்று கூறியுள்ளார் அன்பழகன்.
ஏற்கனவே தொகுதிகளின் எண்ணிக்கை முடிவு செய்யப்பட்டு விட்ட நிலையில்,காங்கிரஸ், பாமக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன்முஸ்லீம் லீக் ஆகிய கூட்டணிக் கட்சிகள் தாங்கள் விரும்பும் தொகுதிகளின்பட்டியலை கருணாநிதியிடம் வழங்கியுள்ளன.
அந்தப் பட்டியலை கருணாநிதியும் முக்கிய தலைவர்களும் தீவிரமாகப்பரிசீலிக்கவுள்ளனர். மேலும் இது தொடர்பாக பாமக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் தலைவர்களுடன் நேற்றிரவு ஆலோசனை நடத்தினார் கருணாநிதி.
தொடர்ந்து கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கருணாநிதியை சந்தித்துப் பேசவுள்ளனர்.இதனால் தான் நேர்காணல் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.