For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐ.என்.டி.யூ.சி நிர்வாகிகள் கூண்டோடு நீக்கம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால் ஐ.என்.டி.யூ.சி. அமைப்பின் தலைவர் சுப்பையா,பொதுச் செயலாளர் ஜி.காளன் உள்ளிட்ட நிர்வாகிகள் கூண்டோடு நீக்கப்பட்டுள்ளனர்.

காங்கிரஸ் தொழிற்சங்கமான ஐ.என்.டி.யூ.சியின் பொதுச் செயலாளர் காளன், தலைவர்சுப்பையா ஆகியோர் சமீபத்தில் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுக கூட்டணியில்இணைந்தனர். அவர்களுக்கு 2 தொகுதிகளை ஒதுக்கினார் ஜெயலலிதா.

அரசியல் வட்டாரத்தில் இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந் நலையில்ஐ.என்.டி.யூ.சியின் அவசர பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் கூட்டப்பட்டது.துணைத் தலைவர் நஞ்சப்பன் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.

இக்கூட்டத்தில் தலைவர் சுப்பையா, பொதுச் செயலாளர் காளன், துணைத் தலைவர்கல்யாண சுந்தரம், பொருளாளர் தேவராஜ் ஆகியோரை அவர்களதுபொறுப்புகளிலிருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதிமுகவுடன் ஐ.என்.டி.யூ.சி செய்து கொண்ட கூட்டணி உடன்பாட்டை நிராகரித்தும்ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் மதுரை கோவிந்தராஜன் பேசும்போது சலசலப்பு ஏற்பட்டது. அவருக்கும்,துணைத் தலைவர் நஞ்சப்பனுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அமைதிஏற்படுத்தப்பட்டது.

கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமியும் கலந்து கொண்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X