மலைகளையும் விடாத கழகங்கள்!!!
சென்னை:
தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள மலைப் பாறைகளில் தேர்தல் விளம்பரம் செய்யதடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் விளக்கம் அளிக்குமாறு கூறி அதிமுகமற்றும் திமுக பொதுச் செயலாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னைஉயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விலங்குகள் மற்றும் இயற்கை வள பாதுகாப்பு அறக்கட்டளை என்ற அமைப்புசென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றைத் தாக்கல் செய்தது.அந்த மனுவில், சென்னையிலிருந்து மதுரை வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையின்இரு புறங்களிலும் இருக்கும் மலைப் பாறைகளில் தேர்தல் விளம்பரங்கள்செய்யப்படுகின்றன.
இதனால் வனச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. வனச் செல்வங்கள் அழியும் நலைஉருவாகியுள்ளது. எனவே இந்த விளம்பரங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றுகூறப்பட்டிருந்தது.
திமுக மற்றும் அதிமுகவை தனது வழக்கில் பிரதிவாதிகளாக அந்த அமைப்புசேர்த்துள்ளது.
மனுவை பரிசீலனை செய்த தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி பிரபா ஸ்ரீதேவன்ஆகியோர், திமுக மற்றும் அதிமுக பொதுச் செயலாளர்களுக்கு விளக்கம் கேட்டுநோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.