சென்னை: புதிய போலீஸ் கமிஷனர் யார்?
சென்னை:
சென்னை மாநகர காவல்துறை கமிஷ்னர் பதவியில் இருந்து நட்ராஜை நீக்கும் உத்தரவை மறுபரிசீலனைசெய்யுமாறு தமிழக அரசு விடுத்த கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்துவிட்டது.
நட்ராஜ் மீது ஏகப்பட்ட புகார்கள் வந்துள்ளதாகவும், தேர்தல் நேரத்தில் ஒரு கட்சியின் தலைவருக்கு (முதல்வர்ஜெயலலிதா) ஆதரவாக அவர் பேசியது அப்பட்டமான விதிமீறல் என்றும் தலைமைத் தேர்தல் ஆணையர்டாண்டன் கூறியுள்ளார்,இதனால் அவரது பதவி மாற்றத்தை மறு பரிசீலனை செய்ய முடியாது என தேர்தல் ஆணையம் கூறிவிட்டது.அவருக்குப் பதிலாக மற்றவர்களின் பெயர்களை தங்களிடம் பரிந்துரைக்குமாறு தமிழக அரசுக்கு தேர்தல்ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதில் ஒருவரை தேர்தல் ஆணையமே தேர்வு செய்து சென்னை போலீஸ் கமிஷ்னராக நியமிக்கவுள்ளது.
இதையடுத்து புதிய ஆணையர் பதவிக்கு 7 பேரின் பெயர்களை ஜெயலலிதா பரிசீலித்து வருவதாகத் தெரிகிறது.
கூடுதல் டிஜிபி விஜயக்குமார், ஆர்.என்.சவானி, லத்திகா சரண், பாலச்சந்திரன், நடராஜன், வெங்கட கிருஷ்ணன்,நாஞ்சில் குமரன் ஆகியோரது பெயர்கள் பரிசீலனையில் உள்ளன.
இதில் நாஞ்சில் குமரன், காவல்துறை கூடுதல் டிஜிபி திலகவதியின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால்,இவர்கள் பிரிந்து வாழ்கின்றனர்.
விஜயக்குமார் ஏற்கனவே சென்னை கமிஷ்னராக இருந்தார். தனது ஊர்க்காரரான கேரளத்தைச் சேர்ந்த மாஜிகவர்னர் பாத்திமா பீவியின் உறவினர்களுடன் மோதிய வெங்கடேச பண்ணையாரை எண்கெளன்டரில் கொல்லஉத்தரவிட்டு சிக்கலில் மாட்டினார். இதையடுத்து வீரப்பனைைப் பிடிக்கும் அதிரடிப்படைக்கு அனுப்பப்பட்டார்.