கம்யூனிஸ்ட்களுக்கு கிடைத்துள்ள தொகுதிகள்
சென்னை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பட்டியல் 30ம் தேதி வெளியிடப்படும்என கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் வரதராஜன் தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 13 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் 3 தனித்தொகுதிகள் கிடைத்துள்ளன.
மீதமுள்ள 10 தொகுதிகளில் 3 தொகுதிகளை பெண்களுக்கு ஒதுக்கவுள்ளோம்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 13 வேட்பாளர்கள் அடங்கிய அதிகாரப்பூர்வபட்டியல் வரும் 30ம் தேதி வெளியிடப்படும்.
இந்திய கம்யூனிஸ் கட்சியின் 10 தொகுதிகளையும் சேர்த்து மொத்தம் 23தொகுதிகளிலும் இடது சா;3க் கட்சிகள் பெரும் வெற்றியைப் பெறும்.
திஐக கூட்டணியின் வெற்றிக்காக இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தீவிரமாக பாடுபடும்என்றார் வரதராஜன்.
திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 13 இடங்கள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தமும்கையெழுத்தாகிவிட்டது. இந்தப் பட்டியலை இரு கட்சிகளும் இன்னும் வெளியிடவில்லை. ஆனாலும் அந்த 13இடங்கள் குறித்து அறிவாலய வட்டாரத்தில் கிடைத்த தகவல்
அந்த 13 இடங்கள் விவரம்:
மதுரை கிழக்கு
திருவட்டாறு
நாகப்பட்டிணம்
சிதம்பரம்
உளுந்தூர்பேட்டை
திருப்பூர்
பெரம்பூர்
குடியாத்தம்
சிங்காநல்லூர்
திருப்பரங்குன்றம்
விளவங்கோடு
திண்டுக்கல்
வாசுதேவநல்லூர் ஆகியவை
இந்திய கம்யூனிஸ்ட்:
அதே போல இந்திய கம்யூனிஸ்ட் இந்த 10 இடங்கள் தான் வேண்டும் என்று கறாராகப் பேசி வாங்கியுள்ளதொகுதிகள்:
நன்னிலம்
மன்னார்குடி
சிவகங்கை
திருத்துறைப்பூண்டி
கோவில்பட்டி
பெருந்துறை
தளி
ஆலங்குடி
அவினாசி
ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆகியவையாம்