செக்ஸ் டார்ச்சர்- மந்திரி தளவாய் குற்றமற்றவர்
சென்னை:
அமைச்சர் தளவாய் சுந்தரம் பெண் டாக்டருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாககூறப்பட்ட புகாரில் உண்மையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் நியமித்தமருதமுத்து கமிஷன் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பணியாற்றியவர் டாக்டர் கோமதி.இவர் சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் அமைச்சர் தளவாய் சுந்தரம் மீதுபுகார் கொடுத்தார்.அதில், எனக்கு அமைச்சர் தளவாய் சுந்தரம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார்.அதற்கு நான் உட்படாததால், டிரான்ஸ்பர் செய்து பழி வாங்குகிறார். அவர் மீதுநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
ஆனால், அந்தப் புகாரின் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. புகரை வாங்கிவைத்துக் கொண்டு அடை காத்தனர்.
இதையடுத்து உயர் நீதிமன்றத்தை அணுகினார் கோமதி. இதைத் தொடர்ந்துபோலீசாருக்கு கண்டனம் தெரிவித்த நீதிமன்றம், கோமதி கூறிய புகார்கள் குறித்துவிசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி மருதமுத்து தலைமையில் விசாரணைக் கமிஷனைநியமித்தது.
இந்தக் குழுவில் ஓய்வு பெற்ற டிஜிபி ரோஷன் லால் ஹாண்டா, வழக்கறிஞர்அருள்மொழி ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர்.
இந்தக் குழு விசாரணை நடத்தி தலைமைச் செயலாளரிடம் அறிக்கையைசமர்ப்பித்துள்ளது. அதில், அமைச்சர் தளவாய் சுந்தரம் மீது டாக்டர் கோமதி சுமத்தியகுற்றச்சாட்டுக்களில் உண்மை இல்லை. வேண்டும் என்றே பழிசுமத்தும் வகையில்இந்தப் புகார்களை கோமதி சுமத்தியுள்ளார்.
டாக்டர் கோமதி மீது துறை சார்ந்த விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்றுகூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications