மா.செக்களுடன் ஜெ. இன்று ஆலோசனை
சென்னை:
அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் கட்சியின் பொதுச் செயலாளரும்,முதல்வருமான ஜெயலலிதா இன்று முக்கிய ஆலோசனை நிடத்துகிறார்.
கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகளைப் பிரித்துக் கொடுப்பதில் குழப்பத்துடன்வேலை ஒருபுறம் நடந்து வரும் நிலையில், தேர்தல் பணிகளில் தீவிரம் கவனம்செலுத்தி வருகிறார் ஜெயலலிதா.அதன் ஒரு பகுதியாக அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் இன்று அவர் முக்கியஆலோசனை நடத்துகிறார்.
வேட்பாளர் தேர்வு, தொகுதிகள் நிலவரம், உளவுத்துறை தந்துள்ள தேர்தல்சாதக-பாதக ரிப்போர்ட், பூத் கமிட்டி அமைப்பது, தேர்தல் நிதி, உத்திகள் உள்ளிட்டமுக்கிய விஷயங்கள் குறித்த ஜெயலலிதா ஆலோசிக்கவுள்ளார்.
தொகுதிகளின் சாத-பாதக நிலவரம் மட்டுமின்றி வேட்பாளர்கள் குறித்தும்உளவுத்துறையிடம் பல கட்டமாக ரிப்போர்ட் வாங்கியுள்ளது அதிமுக தலைமைஎன்கிறார்கள்.
இந் நிலையில் திங்கள்கிழமையே இந்த மா.செ. கூட்டம் நடைபெறுவதாக இருந்தது.ஆனால் மதிமுக, விடுதலைச் சிறுத்தைகளுக்கான தொகுதி ஒதுக்கீட்டில் தொடர்ந்துஇழுபறியும் குழப்பமும் நீடித்ததால் அது ஒத்திவைக்கப்பட்டது.
இன்னும் அந்தப் பிரச்சனை தீராத நிலையில், இன்று காலை மணிக்கு ஜெயலலிதாதலைமையில் அதிமுக தலைமைக் கழகத்தில் இக் கூட்டம் நடைபெறுகிறது.