அதிமுக Vs
சென்னை:
தமிழ்நாடு, புதுவை சிறுபான்மையினர் கூட்டமைப்பு இரண்டாக உடைந்தது. பிஷப்பிரகாஷ் என்பவர் தலைமையிலான புதிய அமைப்பு அதிமுகவுக்கு ஆதரவு தருவதாகஅறிவித்துள்ளது.
இதற்கு அதிமுகவின் ஆதரவு பெற்ற இன்னொரு தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது.தேர்தலில் நடுநிலை வகிக்க வேண்டும். யாருக்கும் ஆதரவு தரக் கூடாது என்றுகூட்டத்தில் கலந்து கொண்ட தேசிய லீக், இந்திய யூனியன்ஸ்லீம் லீக் உள்ளிட்டபல்வேறு கட்சிகள் (அனைவரும் அதிமுகவுக்கு ஆதரவாக உள்ளவர்கள்) கோரிக்கைவிடுத்தன.
ஆனால் திமுகவுக்கு ஆதரவாக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால்அதிமுக ஆதரவு கட்சிகள், அமைப்புகள் வெளிநடப்பு செய்தன.
இந் நிலையில, சிறுபான்மையினர் கூட்டமைப்பு பிளவுபட்டுள்ளது. பிஷப் பிரகாஷ்என்பவர் தலைமையில் புதிய அமைப்பு பிறந்துள்ளது.
அந்த அமைப்புக்கு தமிழ்நாடு சிறுபான்மையினர் கூட்டமைப்பு என்று பெயர்சூட்டப்பட்டுள்ளது.
இந்த அமைப்பு தனது ஆதரவை அதிமுகவுக்குத் தெரிவித்துள்ளது. வருகிறசட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியின் வெற்றிக்காக தீவிரமாக பாடுபடப்போவதாக அமைப்பின் தலைவரான பிஷப் பிரகாஷ் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications