விசி வேட்பாளர் பட்டியல்-திருமா போட்டியில்லை
சென்னை:
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் தொல்.திருமாவளவன் சட்டசபைத்தேர்தலில் போட்டியிடவில்லை.
அவரது கட்சியின் 9 வேட்பாளர்களின் பெயர்களையும் இன்று அவர் அறிவித்தார்.அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ல விடுதலைச் சிறுத்தைகளுக்கு 9 தொகுதிகள்வழங்கப்பட்டுள்ளன. அதேபோல புதுவையில் 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
புதுவைக்கான வேட்பாளர்களை ஏற்கனவே திருமாவளவன் அறிவித்து விட்டார்.தேர்தல் அறிக்கையும் வெளியிடப்பட்டு விட்டது.
இந் நிலையில் தமிழகத்தில் போட்டியிடும் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின்பட்டியலை இன்று திருமாவளவன் வெளியிட்டார். அதன் விவரம்:
ஸ்ரீபெரும்புதூர் - இளமாறன்
முகையூர் - சிந்தனைச் செல்வன்
செங்கம் (தனி) - ஆற்றலரசு
உளுந்தூர்பேட்டை (தனி) - வெற்றிச் செல்வன்
காட்டு மன்னார்கோவில் (தனி) -எழுத்தாளர் ரவிக்குமார்
மங்களூர் (தனி) - செல்வப் பெருந்தகை
அரூர் (தனி) - கோவிந்தசாமி
வால்பாறை (தனி) - சுசி கலையரசன்
சீர்காழி (தனி) - துரைராஜன்
பின்னர் செய்தியாளர்களிடம் திருமாவளவன் பேசுகையில், யார் முதல்வர் என்றேஅறிவிக்காமல் தேர்தலை சந்திக்கும் திமுக, கொல்லைப்புறம் வழியாக யாரையோமுதல்வராக்க ரகசியத் திட்டம் தீட்டியுள்ளது. இதை மக்கள் அனுமதிக்க மாட்டர்கள்.
திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகம் வேட்டைக்காடாகி விடும். தலித் மக்களைபுறக்கணிக்கும் திமுகவை தலித் மக்கள் வருகிற தேர்தலில் புறக்கணிப்பார்கள்என்றார்.
கடலூர் மாவட்டத்தில் ஒரு தொகுதியில் தான் போட்டியிடுவேன் என்று ஏற்கனவேதிருமாவளவன் கூறியிருந்தார். ஆனால் அறிவித்தபடி அவர் தேர்தலில்போட்டியிடவில்லை.
வைகோ பாணியில் தேர்தலில் போட்டியிடாமல், தீவிரப் பிரசாரம் மேற்கொள்ளத்திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.