திமுகவுக்கு வெளியில் இருந்து ஆதரவு: ராமதாஸ்
சென்னை:
திமுக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது போல 2 ரூபாய்க்கு கிலோ அரிசி, இலவசடிவி, இலவச சமையல் கேஸ் அடுப்பு ஆகியவற்றை தருவது சாத்தியம் தான் எனறுபாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
கட்சியின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர்பேசுகையில்,தமிழகத்தில் சத்துணவுத் திட்டம், இலவச வேட்டி, சேலை, இலவச சைக்கிள், இலவசபாட நூல்கள் ஆகியவற்றைத் தரும்போது கலர் டிவி, சமையல் அடுப்பு, 2 ரூபாய்க்குகிலோ அரிசியை ஏன் தர முடியாது?
பரம்பரை எதிரியான திமுகவை தேர்தல் களத்தில் சந்திப்பது இதுவே கடைசிமுறையாக இருக்கும் என்று ஜெயலலிதா கூறியிருப்பது அவரது அரசியல் அநாகரீககுணத்தைக் தெளிவாக எடுத்துக் காட்டிவிட்டது.
ஏப்ரல் 2ம் தேதி முதல் எங்களது தேர்தல் பிரசாரம் தொடங்குகிறது. திண்டிவனத்தைஅடுத்துள்ள தைலாபுரத்தில் கட்சியின் பொதுக் குழுக் கூட்டம் நடைபெறுகிறது.
அப்போது பிரசார உத்திகள் குறித்து இறுதி செய்யப்படும்.
சந்தனக் கடத்தல் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமியை நாங்கள் வேட்பாளராகநிறுத்துவோம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அதுகுறித்து நாங்கள் விவாதிக்கவேஇல்லை.
பெண்ணாகரம் தொகுதியிலிருந்து மேட்டூர் தொகுதிக்கு ஜி.கே.மணி மாறியதில் பெரியவிசேஷம் எதுவும் இல்லை. மேட்டூர்தான் அவரது சொந்த ஊர். சொந்த ஊருக்கு அவர்இப்போது திரும்பிச் செல்கிறார், அவ்வளவுதான்.
தேர்தலில் திமுகவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்கும். உங்களது வாதத்தையேஎடுத்துக் கொண்டால், ஒருவேளை பெரும்பான்மை கிடைக்காமல் போனால், அதற்கு99 சதவீதம் சாத்தியமில்லை, அப்படியே மெஜாரிட்டி கிடைக்காவிட்டால், திமுகவுக்குவெளியிலிருந்து ஆதரவு தருவோம்.
ஆட்சியில் பங்கு கோர மாட்டோம் என்றார் ராமதாஸ்.