இரானில் பயங்கர நிலநடுக்கம்: 50 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
தெஹ்ரான்:
இரானை இன்று பயங்கர பூகம்பம் தாக்கியது. இதில் 50 பேர் வரை பலியாகியுள்ளனர்
மேற்கு இரானின் லோரெஸ்தான் பகுதியில் பூகம்பம் தாக்கியதில் அப் பகுதியின் நூற்றுக்கணக்கான கிராமங்களில்வீடுகள் தரைமட்டமாயின.இதில் 50 பேர் பலியாகிவிட்டனர். 800 பேர் காயமடைந்துள்ளதாக இரான் அரசு செய்தி நிறுவனமான இர்னாதெரிவிக்கிறது.
இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6 என்ற அளவுக்குப் பதிவாகியுள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கைபல மடங்கு உயரக் கூடும் என்று தெரிகிறது.
முன்னதாக நேற்றிரவு 2 முறை லேசான நில அதிர்வுகள் ஏற்பட்டன. அதைத் தொடர்ந்து இன்று கடுமையானநிலநடுக்கம் ஏற்பட்டது.
ஒட்டன்சத்திரம் அருகே நில அதிர்வு:
இதற்கிடையே திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே இடையகோட்டை, புலியூர் நத்தம் மற்றும் சின்ன குழிப்பட்டிஆகிய பகுதிகளில் நேற்றிரவு லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் மக்கள் அலறியபடி வீடுகளை விட்டு ஓடினர்.
ஆனால், உயிர்ச் சேதமே, பொருட் சேதமோ ஏற்படவில்லை.












Click it and Unblock the Notifications