சிபிஎம்: 5 புது முகங்கள்- 3 பெண்கள்
சென்னை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் கட்சியின் பட்டியலில் 5 புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 13 தொகுதிகளில்போட்டியிடுகிறது. நேற்று இதற்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.இதில் தற்போதைய எம்எல்ஏக்களான நன்மாறன், மகேந்திரன், பாலபாரதிஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. முன்னாள் எம்எல்ஏக்கள்கிருஷ்ணன், கோவிந்தசாமி ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.
தற்போதைய எம்எல்ஏக்களாக இருக்கும் மணி, ஹேமச்சந்திரன் ஆகியோருக்குவாய்ப்பு வழங்கப்படவில்லை.
லீமாரோஸ், ஜான் ஜோசப், வெங்கடேஷன், லதா, டெல்லிபாபு ஆகியோர் தேர்தலுக்குபுதியவர்கள்.
வேட்பாளர்களில் சுவந்திதாசன் சிஐடியுசி பொதுச் செயலாளராகவும், பாலகிருஷ்ணன்,தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளராகவும் உள்ளார். திண்டுக்கல்வேட்பாளர் பாலபாரதி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க தமிழ்மாநில செயலாளர்ஆவார்.
மகேந்திரன் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தமிழ் மாநில தலைவராகவும், நன்மாறன்முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் துணைத் தலைவராகவும், வெங்கடேசன்தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் துணை பொதுச்செயலாளராகவும்உள்ளனர்.
அறிவிக்கப்பட்ட 13 வேட்பாளர்களில் 3 பெண் வேட்பாளர்கள், 11 பேர்பட்டதாரிகள். பெண் வேட்பாளர்கள் மாதர் இயக்க முன்னணியில் ஊழியர்களாகஇருக்கின்றனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விரைவில் தேர்தல் அறிக்கையை வெளியிடவுள்ளது.பிரச்சாரத்தின் போது பயன்படுத்த கேசட்டுகள், நாடகங்கள், குறும்படங்களைகட்சியினர் தயார் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications