கலர் டிவிக்கு விளக்கம் 5ம் தேதி: கருணாநிதி
சென்னை:
இலவச கலர் டிவி திட்டம், ரூ. 2க்கு அரிசி ஆகிய திட்டங்கள் குறித்து வருகிற 5ம்தேதி சென்னையில் நடைபெறும் பிரசார பொதுக் கூட்டத்தில் விரிவாக விளக்குவதாகதிமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
திமுக தேர்தல் அறிக்கையில் இலவச கலர் டிவி, 2 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி, இலவசசமையல் எரிவாயு அடுப்பு என பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்கள்அறிவிக்கப்பட்டுள்ளன.இந்தத் திட்டங்கள் அரசியல் வட்டாரத்திலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும்சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதெல்லாம் நடக்கிற காரியமா என்ற கேலிப் பேச்சுகிளம்பியுள்ளது. இந்த நிலையில் இதுதொடர்பாக திமுக நாளிதழான முரசொலியில்கருணாநிதி தெரிவித்துள்ளதாவது:
2 ரூபாய்க்கு கிலோ அரிசி என்பது நிறைவேற்றவே முடியாத காரியமல்ல. நாங்கள்ஆட்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால், அடுத்த நிமிடமே இந்தத் திட்டத்தைநிறைவேற்றுவதற்கான உத்தரவை பிறப்பிப்போம்.
விலையைக் குறைத்து விற்பனை செய்வதற்கு யாரும் தடை போடப் போவதில்லை.இலவச கலர் டிவி திட்டம் குறித்து வருகிற 5 ம் தேதி சென்னையில் நடைபெறும்ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் விரிவாகவிளக்கம் அளிக்கவுள்ளேன்.
உழவர் சந்தைகளை ஒழித்து விட்டு உழவர் பாதுகாப்புத் திட்டத்தைக் கொண்டுவந்துள்ளார் ஜெயலலிதா. இதைப் போய் சாதனை என்று சொல்லிக் கொள்கிறார்அவர். இதை யார் நம்பினாலும், விவசாயிகள் நம்ப மாட்டார்கள் என்று கூறியுள்ளார்கருணாநிதி.












Click it and Unblock the Notifications