சென்னை-தூத்துக்குடி விமான சேவை தொடங்கியது
தூத்துக்குடி:
கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பின்னர் சென்னை, தூத்துக்குடி இடையே, விமானப்போக்குவரத்து தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய நகரங்களில் முக்கிய விமானநிலையங்கள் உள்ளன. இதேபோல தூத்துக்குடி வாகைக்குளம், சேலம் ஆகியஇடங்களிலும் விமான நிலையங்கள் அமைக்கப்பட்டன.ஆனால் இங்கு பயணிகள் போக்குவரத்து திருப்திகரமாக இல்லாததால் விமானபோக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இதனால் தூத்துக்குடி விமான நிலையம் கடந்த 1996ம் ஆண்டு மூடப்பட்டது.முக்கியப் பிரமுகர்கள் பயணிக்கும் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மட்டுமே இங்குவந்து சென்றன.
இந்த நிலையில் ஏர் டெக்கான் நிறுவனம், சென்னை, தூத்துக்குடி இடையே விமானப்போக்குவரத்தை நடத்த முடிவு செய்தது. இதையடுத்து விமான நிலையம்புதுப்பிக்கப்பட்டு புதுப் பொலிவு கண்டது.
குறைந்த கட்டணத்தைக் காண்ட இந்த விமான சேவை நேற்று துவங்கியது.சென்னையிலிருந்து கிளம்பிய முதல் விமானம் மதுரை வழியாக முற்பகல் 11.15மணிக்கு தூத்துக்குயில் தரையிறங்கியது.
இந்த விமானத்தில் 33 பேர் பயணம் செய்தனர். பின்னர் பகல் 12.15 மணிக்கு மீண்டும்மதுரை வழியாக விமானம் சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றது.
விமானப் போக்குவரத்தை முன்னாள் மத்திய அமைச்சரும், நெல்லை எம்பியுமானதனுஷ்கோடி ஆதித்தன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். சென்னையிலிருந்துதூத்துக்குடிக்கு பயண நேரம் 2 மணி நேரமாகும்.
தொழில் நகரமான தூத்துக்குடிக்கு விமான சேவை மீண்டும் தொடங்கியுள்ளதன் மூலம்நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்கள் பயன் பெறுவர் என்று டெக்கான் நிறுவனம்தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications