For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கடலூர் சிறை கைதிகளிடம் செல்போன்கள் பறிமுதல்

By Staff
Google Oneindia Tamil News

கடலூர்:

கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளிடம் இன்று காவல்துறை உயர்அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் ஏராளமான செல்போன்கள் சிக்கின.

கடலூர் மத்திய சிறையில் 1000க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.பல்வேறு வட மாவட்ட கைதிகள் இங்கு அடைக்கப்பட்டுள்ளனர். சங்கரராமன்கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளிகளில் ஒருவரான கூலிப் படைத் தலைவன்அப்புவும் இங்குதான் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு கடலூர் சிறையில் சிறை வார்டன்கள்கைதிகளிடம் சோதனை நடத்தினர். அவர்களிடம் செல்போன்கள் இருப்பதாக வந்ததகவலயைடுத்து இந்த சோதனை நடந்தது.

ஆனால் இதை எதிர்த்து கைதிகள் கலகத்தில் ஈடுபட்டனர்.

இதில் நான்கு வார்டன்களும், நான்கு கைதிகளும் படுகாயம் அடைந்தனர்.காயமடைந்த கைதிகள் சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து இன்று காலை காவல்துறை உயர் அதிகாரிகள் சிறைக்கு வந்தனர். அவர்கள்முன்னிலையில் போலீஸார் தீவிர சோதனையைத் தொடங்கினர்.

இந்த சோதனையில் 50க்கும் மேற்பட்ட செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.இந்த அளவுக்கு செல்போன்கள் கைதிகளிடம் இருந்தது அதிகாரிகளை பெரும்அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்த செல்போன்கள் எப்படி வந்தன,யார் கொடுத்தார்கள், இந்த செல்போன்கள் மூலம்மேற்கொள்ளப்பட்ட அழைப்புகள் குறித்து போலீஸார் தீவிர விசாரணைமேற்கொண்டுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X