2,000 கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் தீடீர் நீக்கம்
சென்னை:
அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கம்ப்யூட்டர் ஆசிரியர்களாக பணியாற்றி வந்த 2,000ஆசிரியர்கள் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தனியார் பள்ளிகளை போலவே அரசு பள்ளிகளிலும் கம்ப்யூட்டர் பாடத்திட்டதைதமிழக அரசு அறிமுகப்படுத்தியது. இதற்காக அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 1999ல்ஒப்பந்த அடிப்படையில் முதற்கட்டமாக ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்கள்நியமிக்கப்பட்டனர்.பிறகு 2000ம் ஆண்டிலும் இரண்டாம் கட்டமாக கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் நியமனம்செய்யப்பட்டனர். எல்காட் நிறுவனம் மூலம் ஒப்பந்த அடிப்படையில்ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.1 ,500 வழங்கப்பட்டு வந்தது.
5 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையிலே இவர்கள் பணியாற்றி வந்தனர்.இந்நிலையில் எல்காட் நிறுவனத்திற்கும், அரசுக்கும் இடையிலான ஒப்பந்தம் 2004ல்நிறைவடைந்தது. இதனால் இவர்களின் பணிக்காலத்தை மேலும் 2 ஆண்டுகள்நீட்டிக்க அரசு உத்தரவிட்டது.
ஆனால் இவர்கள் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாக சம்பளம் பெறலாம் எனதெரிவித்தது. இந்நிலையில் ஒப்பந்த அடிப்படையிலான ஊழியர்களை நியமணம்செய்ய வேண்டும் என இவர்கள் பல்வேறு போரட்டங்களை நடத்தி வந்தனர்.
பிப்ரவரி 15ல் சென்னையில் நடந்த போராட்டத்தில் கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் கைதுசெய்யப்பட்டு மார்ச் 6ம் தேதி விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கம்ப்யூட்டர் ஆசிரியர்களாக இருந்த2,000 பேரையும் பணியிலிருந்து நீக்கியுள்ளது தமிழக அரசு.
பள்ளி தலைமை ஆசிரியர்கள் இவர்களை பணியிலிருந்து விடுவிப்பதாக கடிதம்கொடுத்து வருகின்றனர்.
இது குறித்து கம்ப்யூட்டர் ஆசிரியர் ஒருவர் கூறுகையில், சில பள்ளிகளில் கம்ப்யூட்டர்ஆசிரியர்களுக்கான சம்பளம் நிலுவையில் உள்ளது. எங்களிடம் உள்ளபொறுப்புகளை இன்னும் பள்ளிகளில் ஒப்படைக்கவில்லை.
பணி நிரந்தம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்த நிலையில் எங்களைபணியிலிருந்து விடுவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு எங்களுக்குமீண்டும் வேலை வழங்க வேண்டும் என்றார்.
| INDIA NEWS |
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications