நாளை மறுநாள் வேட்பு மனு தாக்கல் தொடக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் 13ம் தேதி தொடங்குகிறது.

தமிழக சட்டசபை தேர்தல் மே 8ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான அனைத்துஏற்பாடுகளும் முழுவீச்சில் செய்யப்பட்டு வருகின்றன. வாக்காளர் பட்டியல்திருத்தப்பட்டு விட்டது. ஆளும்கட்சியினர் சேர்த்த லட்சக்கணக்கான போலிவாக்காளர்கள் நீக்கப்பட்டுவிட்டனர்.

புகைப்பட அடையாள அட்டைகள் வழங்கும் பணி வேகமாக நடந்து வருகிறது.தலைமைத் தேர்தல் ஆணையர் டாண்டன் மற்றும் இரு தேர்தல் ஆணையர்களும்தமிழகத்திற்கு வந்து பல்வேறு ஆய்வுகளை செய்து விட்டுச் சென்றுள்ளனர்.

அனைத்து மாவட்டங்களிலும் தேர்தலுக்கான ஏற்பாடுகள் முடிந்துள்ள நிலையில்இறுதிக் கட்டமாக இன்று சென்னையில் வடக்கு மாவட்ட தேர்தல் அதிகாரிகள், உதவித்தேர்தல் அதிகாரிகளுக்கான பயிற்சி வகுப்பு இன்று நடைபெற்றது.

இந் நிலையில் நாளை மறுநாள் (13ம் தேதி) தேர்தலுக்கான அறிவிப்பை முறைப்படிதேர்தல் ஆணையம் வெளியிடுகிறது. அன்றே வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது.

மனுதாக்கல் செய்ய கடைசி நாள் ஏப்ரல் 20ம் தேதியாகும். 21ம் தேதி மனுக்கள்பரிசீலனை செய்யப்படும். மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் ஏப்ரல் 24ம் தேதி.வாக்குப் பதிவு மே 8ம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 11ம் தேதிநடைபெறும்.

அனைத்து முக்கியக் கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து விட்டநிலையில் முதல் நாளிலிருந்தே வேட்பு மனு தாக்கல் சூடு பிடிக்கும் எனத் தெரிகிறது.

TAMILNADU NEWS INDIA NEWS
[an error occurred while processing this directive]
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+