For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அருணா கொலை வழக்கு விசாரணைக்குத் தடை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

நெல்லை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வரும் முன்னாள் திமுக அமைச்சர் ஆலடிஅருணாவின் கொலை வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம்இடைக்காலத் தடை விதித்துள்ளது.

அருணா கொலை வழக்கு திருநெல்வேலி செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணையில்உள்ளது. இந் நிலையில் ஆலடி அருணாவின் மனைவி கமலா சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.ஷாவுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில், எனது கணவர் கொலை வழக்கு நெல்லை நீதிமன்றத்தில் நியாயமாகநடக்கவில்லை. எனது விசாரணைக்ைகு தடை விதிக்க வேண்டும் என்றுகோரியிருந்தார்.

இந்தக் கடிதத்தை பொது நல மனுவாக பாவித்து தலைமை நீதிபதி ஷா, நீதிபதி பிரபாஸ்ரீதேவன் ஆகியோர் இன்று விசாரித்தனர்.

பின்னர் இதுதொடர்பாக விளக்கம் அளிக்கக் கூறி தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பஉத்தரவிட்டார்.

மேலும் வரும் 20ம் தேதி வரை இந்த வழக்கு விசாரணைக்கும் இடைக்காலத் தடைவிதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கில் எஸ்.ஏ.ராஜா கைதுசெய்யப்பட்டது நினைவுகூறத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X