ஐயா ஆட்சி, அம்மா ஆட்சி, அடுத்து தம்பி ஆட்சி!
சென்னை:
தமிழக மக்கள் ஐயா ஆட்சி, அம்மா ஆட்சியைப் பார்த்து விட்டனர். அடுத்து பாஜகஎன்ற தம்பி ஆட்சியைப் பார்க்கவுள்ளனர் என்று பாஜக மூத்த தலைவர் வெங்கையாநாயுடு கூறியுள்ளார்.
பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் அறிமுகக் கூட்டம் சென்னையில்நடந்தது. இதில் நாயுடு பேசுகையில்,இரண்டு திராவிடக் கட்சிகளும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டிப் பேசி வருகிறார்கள்.குடும்ப ரீதியிலான அரசியலும், வாரிசு அரசியலும் இங்கு தலைவிரித்தாடுகிறது.
இரண்டு கட்சிகளுமே சந்தர்ப்பவாத கட்சிகள், இவர்களது கூட்டணிகளும்சந்தர்ப்பவாத கூட்டணிகள். ராஜீவ் காந்தியைக் கொன்ற கட்சி என்று திமுகவைகாங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது. ஆனால் இப்போது அதே திமுகவுடன் காங்கிரஸ்கூட்டணி வைத்துள்ளது.
திமுக மற்றும் அதிமுக கூட்டணிகளை விட பாஜக கூட்டணி வலுவாக உள்ளது (தைசிரிக்காமல் சொன்னார் நாயுடு). எங்களது கூட்டணியின் வெற்றி உறுதி. இப்படிப்பட்டகூட்டணியைத்தான் மக்கள் எதிர்பார்த்தார்கள்.
எந்தக் கூட்டணியிலும் இல்லாத வகையில் எங்களது கூட்டணியில் அதிக அளவிலானகட்சிகள் இடம் பெற்றுள்ளன.
ஐயா ஆட்சி, அம்மா ஆட்சி என இரு ஆட்சிகளையும் தமிழக மக்கள் பார்த்துவிட்டார்கள். அடுத்து பாஜக என்ற தம்பி ஆட்சியை மக்கள் பார்க்கப் போகிறார்கள்என்றார்.
வேட்பாளர்கள் அனைவரும் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் மெரீனா கடற்கரையில்உள்ள காந்தி சிலைக்கு வேட்பாளர்கள் மற்றும் தலைவர்கள் சென்றனர். அங்கு காந்திசிலை முன்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந் நிகழ்ச்சியில் பாஜக தலைவர்கள் தவிர கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும்கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications