For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கை ராணுவம்-சிங்கள வெறியர்கள் வெறியாட்டம்: 10 தமிழர்கள் கொலை

By Staff
Google Oneindia Tamil News

திரிகோணமலை:

இலங்கையில் 10 தமிழர்களை சிங்கள வெறியர்களும் ராணுவமும் சேர்ந்து படுகொலை செய்துள்ளனர். மேலும்தமிழர்களின் கடைகளும் எரிக்கப்பட்டுள்ளன.

இதனால் இலங்கையில் மீண்டும் இனக் கலவரம் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ராணுவமே நடத்தியுள்ள இத்தாக்குதலையடுத்து பிரதமர் மன்மோகன் இலங்கை அதிபர் ராஜபக்ஷேவைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு நிலைமையை நேரில் விசாரித்தார்.

தமிழர்களுக்கு எதிரான வன்முறையைக் கட்டுப்படுத்துமாறும், உரிய இழப்பீட்டை வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.

கடந்த வாரத்தில் திரிகோணமலை தமிழ் மக்கள் பேரவையின் தலைவரான விக்னேஸ்வரன் இலங்கைராணுவத்தின் உதவியுடன் கொலை செய்யப்பட்டார். தமிழ் எம்பியாக பதவியேற்க நிலையில் அவர்கொல்லப்பட்டார்.

இதையடுத்து நடந்த கண்ணிவெடித் தாக்குதல்களில் பல கடற்படை வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இந் நிலையில் திரிகோணமலையில் ஒரு ராணுவ வீரர் குண்டு வெடிப்பில் பலியானார். இதைத் தொடர்ந்துராணுவத்தினர், கடற்படையினர், சிங்கள வெறியர்கள் ஆகியோர் கூட்டாக தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

இதில் 10 தமிழர்கள் படுகொலை ஆயினர். 45க்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகாயமடைந்துள்ளனர்.தமிழர்களுக்குச் சொந்தமான 20 கடைகள் எரிக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து தமிழர்கள் நடத்திய எதிர் தாக்குதலில் 5 சிங்களர்கள் கொலை செய்யப்பட்டனர். இப்போதுதிரிகோணமலையில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே ஜெனீவாவில் நடக்கும் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ளப் போவதாக விடுதலைப் புலிகள்அறிவித்துள்ளனர். ஆனால், பேச்சுவார்த்தையை திட்டமிட்டபடி 19ம் தேதிக்குப் பதிலாக சில நாட்கள் தள்ளிவைக்க வேண்டும் என புலிகளின் அரசியல் செயலகத் தலைவர் பூலித் தேவன் கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X