குறுக்கு சால் ஓட்டும் ஜெ: ராமதாஸ் கண்டனம்
நாமக்கல்:
தமிழகத்தில் உள்ள நதிகளை இணைக்க முயற்சிப்போம் என்று முதல்வர் ஜெயலலிதாகூறியிருப்பது நடைமுறைக்கு பயன் தராதது. இது குறுக்கு சால் ஓட்டும் முயற்சி என்றுபாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
கபிலர்மலையில் பிரசாரம் செய்ய வந்த ராமதாஸ் முன்னதாக நாமக்கல்லில்செய்தியாளர்களிடம் பேசுகையில், சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தில் ஜெயலலிதாபேசுகையில், தமிழகத்தில் உள்ள நிதிகள் அனைத்தையும் இணைக்க முயற்சிகள்மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார்.இது நடைறையில் எந்தப் பலனையும் தராததாகும். எல்லோரும் வட மாநிலங்களில்உள்ள நதிகளை இணைத்து அவற்றை தமிழக நதிகளோடு இணைக்க வேண்டும் என்றுகூறி வரும்போது இவர் மட்டும் தமிழக நதிகளை இணைப்போம் என்று கூறுகிறார்.இது குறுக்குசால் ஓட்டும் முயற்சியாகும்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் அதைச் செய்வேன், இத்தைன லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு தருவேன் என்று ஏராளமான வாக்குறுதிகளை அள்ளி வழங்கி வருகிறார்ஜெயலலிதா. அடுத்த ஐந்து ஆண்டுகளை விடுங்கள், கடந்த ஐந்து ஆண்டுகளில் இவர்என்னதான் செய்தார்?
கருணாநிதி வாரம் இருமுறை சத்துணவோடு முட்டைகள் தருவோம் என்கிறார். இதுநடக்கக் கூடிய காரியம். இதே போல நாமக்கல்லில் கறிக்கோழி, முட்டைகளைப்பாதுகாக்க குளிர்பதன வசதி செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாகஉள்ளது.
இதை நிறைவேற்றவும் நாங்கள் முயற்சி எடுப்போம். தமிழகத்தில் கூட்டணி ஆட்சிஏற்படுவதற்கான வாய்ப்பில்லை. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அந்த ஆட்சியில்நாங்கள் பங்கு பெற மாட்டோம் என்றார் ராமதாஸ்.