அரசியலில் பலவீனமாகிவிட்ட கருணாநிதி-திருமா
திருவண்ணாமலை:
திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள பல திட்டங்களில் தொலைநோக்குப்பார்வை இல்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
திருவண்ணாமலையில் அதிமுக வேட்பாளர் பவுன்குமாரை (இவர் மார்வாடிஎன்கிறார்கள்) ஆதரித்து நடந்த பிரசாரப் பொதுக் கூட்டத்தில் திருமாவளவன்பேசுகையில்,தமிழகத்தில் உள்ள அனைத்து ஏழைகளுக்கும் இலவசமாக டிவி தரப் போவதாககருணாநிதி கூறுவதில் தொலைநோக்குப் பார்வையோ அல்லது மக்கள் நலஎண்ணமோ இல்லை.
தனது குடும்பம் நடத்தும், தனது பேரன் நடத்தும் தொழில் நன்கு வளர்ச்சி அடையவேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்த டிவி திட்டத்தை அவர் அறிவித்துள்ளார்.
டிடிஎச் என்ற திட்டத்தை கருணாநிதியின் பேரன் கலாநதி மாறன் விரைவில்தொடங்கப் போகிறார். அத்தொழில் நன்கு வளர்ச்சி அடைய வேண்டுமேஎன்பதற்காகத்தான் இந்த இலவச டிவியை அறிவித்துள்ளார் கருணாநிதி.
ஒரு குடும்பத்தின் வளர்ச்சிக்காக மாபெரும் இயக்கமான திமுகபலியிடப்பட்டிருக்கிறது. அரசியலில் பலவீனப்பட்டுக் கொண்டிருக்கிறார் கருணாநிதி.
அதைத்தான் அவரது அறிவிப்புகள் வெளிக்காட்டுகின்றன. இலவச டிவி, 2 ரூபாய்க்குகிலோ அரிசி, இலவச எரிவாயு அடுப்பு ஆகிய அறிவிப்புகள் எல்லாம்கவர்ச்சிகரமான அறிவிப்புகளே தவிர மக்களின் வாழ்க்கைத் தரத்திற்குஎந்தவிதத்திலும் உபயோகப் படாத அறிவிப்புகள் ஆகும்.
அதேசமயம், முதல்வர் ஜெயலலிதா மாணவ, மாணவிகளுக்கு வழங்கி வரும் இலவசசைக்கிள் திட்டம் சமூக கண்ணோட்டத்துடன் கூடிய திட்டம். பள்ளிப் படிப்பைமாணவ, மாணவியர் பிளஸ்டூ வரை தங்கு தடையின்றி மேற்கொள்ளவும், தொடர்ந்துமேற்படிப்பை முடிக்கவும் இந்த சைக்கிள் திட்டம் வெகுவாக உபயோகப்பட்டுவருகிறது.
வரும் தேர்தலில் வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டி ஜனநாயக ஆட்சி மலர,ஜெயலலிதா ஆட்சி தொடர வாக்களியுங்கள் என்றார் திருமாவளவன்.












Click it and Unblock the Notifications