வேலூர் சிறுவர் ஜெயிலிலிருந்து 15 பேர் எஸ்கேப்
Subscribe to Oneindia Tamil
வேலூர்:
வேலூரில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலிருந்து 15 சிறுவர்கள் தப்பி ஓடினர்.இதில் 8 பேர் இன்று பிடிபட்டனர். மற்ற 7 பேரையும் பிடிக்க போலீஸார் தீவிரவேட்டை நடத்தி வருகின்றனர்.
வேலூரில் அரசு சிறுவர் சீர்திருத்தப்பள்ளி உள்ளது. இங்கு பல்வேறு குற்றங்களில்சம்பந்தப்பட்ட 68 சிறுவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.இந்த பள்ளியிலிருந்து நேற்று இரவு 15 சிறுவர்கள் தப்பி ஓடினர். இதனால் அங்குபரபரப்பு ஏற்பட்டது.
பல்வேறு தனிப்படைகள் அமைத்து போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில்இறங்கினர். இதில் இன்று காலை உளுந்தூர்ப்பேட்டையில் 8 சிறுவர்கள் பிடிபட்டனர்.
மற்ற 7 பேரையும் பிடிக்க போலீஸார் தீவிர வேட்டையில் இறங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications