சிம்ரன் பேசிய தம்ளு!
Subscribe to Oneindia Tamil
வேதாரண்யம்:
வேதாரண்யம் தொகுதி அதிமுக வேட்பாளரும், கட்சியின் கொள்கை பரப்புச்செயலாளருமான ஓ.எஸ்.மணியனை ஆதரித்து நடிகை சிம்ரன் குழந்தைத் தமிழில்குளறலாக பேசி வாக்கு சேகரித்தார்.
அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரத்தில் குதித்துள்ள சிம்ரன்வேதாரண்யத்தில் வாக்கு சேகரித்தார். திறந்த வேனில் ஓ.எஸ்.மணியன், இயக்குனர்மனோஜ் குமார் புடை சூழ பிரசாரம் கிளம்பிய சிம்ரன், எழுதி வைத்துக் கொண்டுகுழந்தைத் தமிழில் தட்டுத் தடுமாறிப் பேசினார்.
![]() |
எல்லார்க்கும் வண்க்கம். மக்கள் தில்கம் எம்.ஜி.ஆரின் சின்னம் இர்ட்டை இலே.நம்மோட சின்மும் இர்ட்டை இலே. அம்மாவின் ஆசி பெற்ற, அன்புத் தம்பி (!!!!!!)ஓ.எஸ். மணியன்கு ஓட் போடுங்கோ.
ஒங்கோ ஓட் இர்ட்டை இலைக்கே. ப்ளீஸ், உங்களுடை ஓட்டே இர்ட்டை இலைக்கேபோடுங்கோ. தேங்க்யூ, நன்றி வண்க்காம்.
இவ்வாறு அழகாகப் பேசியசிம்ரன், இரண்டு கைகளையும் உயர்த்தி இரட்டைவிரல்களைக் காட்டி அசைக்கவே, கூட்டத்தில் விசில் சத்தம் வானத்தைப் பிய்த்தது.
சிம்ரனைப் பார்க்க பெரும் கூட்டம் கூடியிருந்ததால் பிரசாரம் களை கட்டியது.













Click it and Unblock the Notifications