For Quick Alerts
For Daily Alerts
Just In
தேர்தல் களத்தில் குதித்த அரவாணி!
வேலூர்:
வேலூர் சட்டசபைத் தொகுதியில் சல்மா என்ற அரவாணி சுயேச்சையாகப் போட்டியிடவேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வியாழக்கிழமை முதல்தொடங்கியது. இதில் பல வித்தியாசமான வேட்பாளர்களும் வேட்பு மனு தாக்கல்செய்தனர். ராஜபாளையம் தொகுதியில் 21வது முறையாக சுயேச்சை ஒருவர்வேட்புமனு தாக்கல் செய்தார்.அதேபோல, வேலூர் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட சல்மா என்றஅரவாணியும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் சல்மா பேசுகையில், 2முறை நான் வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பைஇழந்துள்ளேன். ஆனால் இம்முறை சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெறுவேன் என்றுநம்புகிறேன்.
வெற்றி பெற்று சட்டசபைக்குப் போனால் அரவாணிகள் நலனுக்காக பாடுபடுவேன்என்றார் சல்மா. சல்மாவுக்கு ஆதரவாக ஏராளமான அரவாணிகளும் உடன்வந்திருந்தனர்.
Comments
Story first published: Friday, April 14, 2006, 5:30 [IST]