அன்பழகன், வளர்மதி, எஸ்விசேகர் மனு தாக்கல்
சென்னை:
தமிழகம் முழுவதும் பல்வேறு முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள், அமைச்சர்கள்இன்று வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர்.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் 13ம் தேதி தொடங்கியது.முதல் நாளிலேயே முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள் பலர் மனு தாக்கல் செய்தனர்.நேற்று விடுமுறை நாள். இன்று மீண்டும் வேட்பு மனு தாக்கல் சூடு பிடித்துள்ளது.இன்று நல்ல நாள் என்பதால் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள்இன்று மனு தாக்கல் செய்தனர்.
திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் துறைமுகம் தொகுதியில் மனு தாக்கல்செய்தார். அமைச்சர் வளர்மதி ஆலந்தூர் தொகுதியிலும், அதே தொகுதிக்காக பாஜகபொதுச் செயலாளர் ராஜாவும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
மைலாப்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக நாடக நடிகர் எஸ்.வி.சேகர் வேட்புமனு தாக்கல் செய்தார். அமைச்சர் சோமசுந்தரம் உத்திரமேரூர் தொகுதியிலும்,அதிமுகவின் மைதிலி திருநாவுக்கரசு காஞ்சிபுரத்திலும்,
திருத்தணியில் அதிமுக சார்பில் ஹரியும், திமுக சார்பில் ரவிராஜும்,தொண்டாமுத்தூரில் மதிமுக சார்பில் கண்ணப்பனும், பவானியில் அதிமுக சார்பில்கருப்பண்ணனும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால் வேட்பு மனு தாக்கல் கிடையாது. மீண்டும்திங்கள்கிழமை முதல் மனுதாக்கல் தொடங்கும். 17ம் தேதி தேதி திமுக தலைவர்கருணாநிதி தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்கிறார்.