கேரள பிரசாரத்தை ரத்து செய்தார் ஜெயலலிதா
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா தனது கேரள மாநிலப் பிரசாரக் கூட்டத்தை ரத்து செய்துவிட்டார்.
கேரளாவில் முதல் முறையாக அதிக அளவிலான தொகுதிகளில் அதிமுகபோட்டியிடுகிறது.தமிழகத்தில் தன்னுடன் கூட்டணி வைக்க யாருமே முன் வராத நிலையில் காங்கிரஸ்அதிருப்தியாளரான கருணாகரனின் கட்சி, திண்டிவனத்தின் கட்சி, டி.ராஜேந்தர்ஆகியோரோடு கூட்டணி அமைக்க முடிவு செய்தார் ஜெயலிலதா.
இதையடுத்து உளவுப்பிரிவு மற்றும் நடராஜன் உள்ளிட்டோரின் உதவியோடுமதிமுகவும், அதற்கு முன் விடுதலைச் சிறுத்தைகளும் கூட்டணிக்குள் வந்தனர்.
இந் நிலையில் கருணாகரனை சமாதானப்படுத்திய காங்கிரஸ் அவரோடு கூட்டணிவைத்துவிட்டது. இதையடுத்து திண்டிவனம், கருணாகரன், டி.ஆர் ஆகியோரை விட்டுவிலகிவிட்டது அதிமுக.
முதலில் கருணாகரன் கட்சிக்கு தமிழகத்தில் மலையாளிகள் அதிகம் வசிக்கும்தொகுதிகளை ஒதுக்கவும், கேரளத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளில்அவருடன் கூட்டணியுடன் அதிமுக போட்டியிடுவது என்றும் ஜெயலலிதாதிட்டமிட்டிருந்தார்.
ஆனால், அது நடக்காமல் போய்விட்டாலும் கேரளத்தில் தனியாகப்போட்டியிடுவதாக அறிவித்தார் ஜெயலலிதா. அங்கு சுமார் 50 இடங்களில் அதிமுகபோட்டியிடுகிறது.
கேரள மாநில அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து சித்தூர் என்ற இடத்தில் வரும் 20ம்தேதி பிரசாரக் கூட்டத்தில் பேச ஜெயலலிதா திட்டமிட்டிருந்தார். தற்போது அந்தகூட்டம் ரத்து செய்யப்பட்டு விட்டது.
அதற்குப் பதிலாக அன்றைய தினம் பொள்ளாச்சியில் (பொள்ளாச்சிக்கு அருகில்தான்சித்தூர் உள்ளது குறிப்பிடத்தக்கது) ஓய்வு எடுக்கிறார். அதன் பின்னர் அவர் கோவைபுறப்பட்டுச் செல்கிறார்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், மதுரை, தேனி உள்ளிட்ட ஐந்து மாவட்டவிவசாயிகள் கேரள அரசு மீது கடும் கோபத்துடன் இருக்கும் நிலையில், கேரளாவில்என்ன சொல்லி பிரச்சாரம் செய்வது என்ற சிக்கல் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டுள்ளது.
அங்கு போய் பிரசாரம் செய்யும்போது முல்லைப் பெரியாறு விவகாரம் குறித்து பேசமுடியாது. பேசாமல் வந்தால் அது தமிழகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.
இதனால் தனது கேரள பிரசார திட்டத்தையே ஜெயலலிதா ஒட்டுமொத்தமாககைவிட்டுவிட்டார்.
முதல்வரின் பயணம் ரத்து செய்யப்பட்டு விட்டாலும் கூட அதிமுகவைச் சேர்ந்தநடிகர், நடிகையர் பட்டாளத்தை கேரளாவுக்கு அனுப்பி தீவிரப் பிரசாரம்மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications