கருணாநிதிக்கு சமூக அக்கறை இல்லை: திருமா
வேலூர்:
சமூக அக்கறையே இல்லாமல் கலர் டிவி தருவோம் என்று வாக்குறுதிகளை அள்ளிவீசி வருகிறார் கருணாநிதி என விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர்தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதியில் பிரசாரம் மேற்கொண்ட திருமாவளவன்பேசுகையில்,பின் தங்கிய மக்கள் கல்வியில் மேன்மையான நிலைக்கு வர வேண்டும் என்பதற்காகஇலவச சைக்கிள்களை வழங்கி வருகிறார் ஜெயலலிதா.
ஆனால் டிவி பார்த்துக் கெட்டுப் போகட்டும் மக்கள் என்ற எண்ணத்தில் இலசவமாககலர் டிவி தருவோம் எனக் கூறுகிறார் கருணாநிதி. இவர்களில் யாருக்கு சமூகஅக்கறை உள்ளது என்பதை மக்களே யோசித்துப் பார்க்கட்டும்.
விடுதலைச் சிறுத்தைகளை ஒரு கட்சியாக, சக்தியாக அங்கீகரித்த ஒரே கட்சிஅதிமுகதான். அந்தக் கட்சி மீண்டும் ஆட்சியில் அமர வேண்டும்.
இந்த அரசு மீது குற்றச்சாட்டுக்களைச் சொல்ல முடியவில்லை கருணாநிதியால்.அதனால் ஏற்பட்ட குழப்பத்தில்தான் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அள்ளி வீசிவருகிறார் என்றார் திருமாவளவன்.
ஆங்கிலம் வளர்த்த கலைஞர்: கண்ணன்
இதற்கிடையே நாகப்பட்டனம் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயபாலை ஆதரித்துப்பேசிய காங்கிரஸ் பேச்சாளரும் முதல்வர் ஜெயலலிதா ஆதரவாளருமான நெல்லைகண்ணன்,
4 முறை முதல்வராக இருந்துள்ளார் கருணாநிதி. ஆனால் அவரது ஆட்சிக்காலத்தில்தமிழ் வளர்ந்ததா என்று கேட்டால் இல்லை என்பதுதான் பதிலாக இருக்கிறது.
தமிழ் வளர்ச்சிக்காக என்ன செய்தார் கலைஞர்? உண்மையைச் சொல்லப் போனால்ஆங்கிலப் பள்ளிகளைத்தான் அவர் அதிகம் வளர்த்தார்.அவரது ஆட்சிக்காலத்தில்ஆங்கிலப் பள்ளிகள்தான் அதிகம் வளர்ந்தன. புற்றீசல் போல இன்று தமிழகம்முழுவதும் பரவிக் கிடக்கும் ஆங்கிலப் பள்ளிகளின் பெருக்கத்திற்கு இவர்கள்தானேகாரணம்.
கருணாநிதி குடும்பத்திடம் இன்று கோடிக்கணக்கான கருப்புப் பணம் முடங்கிக்கிடக்கிறது. இவற்றை மீட்க மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் என்ன செய்தார்.நடவடிக்கை எடுக்க வேண்டும் அவர் என்றார் கண்ணன்.












Click it and Unblock the Notifications