வெறும் கோவணத்துடன் வந்த வேட்பாளர் கைது!
ஈரோடு:
மொடக்குறிச்சி தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்ய மாட்டுவண்டியில் ஏறி,கோவணம் அணிந்தபடி வந்த நபரை போலீஸார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியைச் சேர்ந்தவர் தங்கவேல். இவர் ஒரு விவசாயி.மொடக்குறிச்சி தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட முடிவு செய்தார்.இதையடுத்து மாட்டு வண்டியில் தனது ஆதரவாளர்களுடன் ஈரோட்டுக்குக்கிளம்பினார். விவசாயி என்பதால் கோவணம் மட்டும் அணிந்து ஒரு துண்டைகழுத்தில் போட்டுக் கொண்டு கும்பிட்டபடி ஈரோட்டுக்கு வந்தார் தங்கவேல்.
இதனால் ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.உடனடியாக அங்கிருந்த போலீஸார் தங்கவேலை தடுத்து நிறுத்தி, இப்படியெல்லாம்வரக் கூடாது, வேட்டி, சட்டை அணிந்தால்தான் அனுமதிப்போம் என்றனர்.
ஆனால் இதுவுக்கு மேல ஒரு பொட்டு துணி கூட நான் போட மாட்டேன் என்று நமிதாமாதிரி முரண்டு பிடித்தார் தங்கவேல்.
இதையடுத்து. கவரிசி காட்டிய தங்கவேலை போலீஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்படுவதற்கு முன்பு செய்தியாளர்களிடம் தங்கவேல் பேசுகையில்,விவசாயிகளுக்கு இன்று கோவணம்தான் மிஞ்சுகிறது. அதை எடுத்துக் காட்டத்தான்இப்படி வந்தேன்.
என்னை இந்தக் கோலத்தில் வேட்பு மனு தாக்கல்செய்ய அனுமதிக்காவிட்டால் 100பேருடன் அம்மணமாக வருவேன் என்று எச்சரித்தார் தங்கவேல்.
அய்யோடா....












Click it and Unblock the Notifications