நுழைவு தேர்வுக்கு தடை கோரி மாணவி வழக்கு
சென்னை:
மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுக்கு தடைவிதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நாமக்கல் மாணவி வழக்கதொடர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக பிரியா என்ற மாணவி தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில்,தமிழகத்தில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் எத்தனை இடங்களுக்குநுழைவுத் தேர்வு நடத்தப்படவுள்ளது என்பதை அரசு தெளிவாக அறிவிக்க வேண்டும்.
அப்படி தெரிவிக்கும் வரை நுழைவுத் தேர்வு நடத்த தடை விதிக்க வேண்டும்.
அரசுக் கல்லூரிகளில் எத்தனை இடங்கள் உள்ளன, சுய நிதிக் கல்லூரிகள் எத்தனைஇடங்களை அரசு ஒதுக்கீட்டிற்கு ஒதுக்கவுள்ளன என்பது தெளிவாகஅறிவிக்கப்படவில்லை.
இதனால் மாணவர்கள் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
அதேபோல, அரசு இடங்களின் எண்ணிக்கை தெளிவாக முடிவு செய்யப்படும் வரைநிர்வாக ஒதுக்கீட்டின் கீழான இடங்களை நிரப்ப, சுய நிதிப் பொறியியல்கல்லூரிகளுக்கு அனுமதி கொடுக்கக் கூடாது என்று மாணவி பிரியா கூறியுள்ளார்.
இந்த மனு தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் ஆகியோர்முன்னிலையில் நாளை அல்லது மறுநாள் விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications