பிற்போக்குத்தனமான கட்சி திமுக: சரத்குமார்
திருநெல்வேலி:
முற்போக்குத்தனமாக செயல்படுவார்கள் என நான் நினைத்த திமுக, பிற்போக்கானஎண்ணம் கொண்டவர்களின் கூடாராமாக விளங்குகிறது என்று நடிகர் சரத்குமார்கூறியுள்ளார்.
பாளையங்கோட்டையிலிருந்து நடிகர் சரத்குமார் செவ்வாய்க்கிழமை பிரசாரம்செய்தார். அதன் பின்னர் நெல்லை டவுன் பகுதியில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் அவர்பேசினார்.
அவர் கூறுகையில், இந்துக்களை அவமதிக்கும் எண்ணம் கொண்டவர் திமுக தலைவர்கருணாநிதி. அவருக்கு இந்துக்கள் என்றாலே பிடிக்காது. இந்துக்களையும், வழிபாட்டுமுறைகளையும் கிண்டல் செய்தவர்தான் கருணாநிதி.
![]() |
இந்துக்கள் என்றால் திருடன், காட்டுமிராண்டி என்று கூறுகிறார் அவர். ஆனால்அவரது குடும்பத்தினரோ கோவில் கோவிலாக சென்று கொண்டிருக்கின்றனர்.கருணாநிதியின் இந்த செயலுக்காக நான் வருத்தப்பட்டேன். இதை எடுத்துக் கூறும்வலிமை எனக்கு இருந்தாலும் அதைச் செய்ய முடியாத நிலையில் இருந்தேன்.
மக்களுக்கு நல்லது செய்வார்கள், முற்போக்குத்தனமாக செயல்படுவார்கள் என நான்திமுக குறித்து நினைத்திருந்தேன்.
ஆனால் பிற்போக்குத்தனமாகவே செயல்பட்டு வந்தார்கள். பிற்போக்கான எண்ணம்கொண்டவர்கள்தான் அங்கு நிரம்பியுள்ளனர். எனவேதான் அங்கிருந்து விலகிவிட்டேன் என்றார் சரத்குமார்.













Click it and Unblock the Notifications