தயாநிதியை நீக்க வைகோ, பாஜக கோரிக்கை
டெல்லி - தூத்துக்குடி:
தொழிலதிபர் டாடாவை தயாநிதி மாறன் மிரட்டியது தொடர்பாக நான் தெரிவித்ததகவல்கள் உண்மை என நிரூபணமாகியுள்ளது. இதுதொடர்பாக என் மீது வழக்குபோட தயாநிதி மாறன் தயாரா என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோகேட்டுள்ளார்.
டாடாவை தயாநிதி மாறன் மிரட்டியதாக வைகோதான் முதலில் தகவல்வெளியிட்டார். இந் நிலையில் தற்போது எழுந்துள்ள புதிய சூழ்நிலை குறித்துதூத்துக்குடி மாவட்டம் ராமானுஜம் நகர் புதூரில் செய்தியாளர்களிடம் வைகோபேசுகையில்,மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், தொலைக்காட்சித் துறையில் வேறு யாரும் கால்பதித்து விடக் கூடாது என்பதற்காக தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துவருகிறார்.
இந் நிலையில்தான் டாடா டிடிஎச். சேவையை கைப்பற்றி, அதை டாடா நிறுவனம்நடத்த விடாத வகையில் இடையூறுகள் கொடுக்கிறார். இதுகுறித்து நான் கூறியகுற்றச்சாட்டுக்கள் இன்று உண்மையாகி விட்டன. நான் ஆதாரம் இல்லாமல் எந்தப்புகாரையும், குற்றச்சாட்டையும் வைக்க மாட்டேன்.
பிரதமர் மன்மோகன் சிங் நல்லவர், நேர்மையானவர், சுத்தமானவர். மத்தியில்நல்லாட்சி நடக்க வேண்டும் என்றால், நேர்மையான ஆட்சி இருக்க வேண்டும்என்றால் தயாநிதி மாறனை உடனடியாக அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்.அவர் இனியும் பதவியில் நீடிக்கக் கூடாது.
தயாநிதி மாறன் குறித்த அத்தனை புகார்களுக்கும் என்னிடம் போதிய ஆதாரங்கள்உள்ளது. முடிந்தால் அவர் என் மீது வழக்கு போடட்டும். அந்த வழக்குகளை சந்திக்கநான் தயாராக இருக்கிறேன் என்றார் வைகோ.
மாறனை நீக்க பாஜக கோரிக்கை:
இதற்கிடையே பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர் டெல்லியில்செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தொழிலதிபர் டாடாவை தயாநிதி மாறன் மிரட்டியது தொடர்பான சர்ச்சை சீரியஸானது.இதுகுறித்து பிரதமர் மன்மோகன் சிங் உடனடியாக விசாரணைக்கு உத்தரவிடவேண்டும்.
இந்த விவகாரத்தில் உண்மையான விவரங்கள் நாட்டு மக்களுக்குத் தெரியவேண்டியது அவசியம். இந்த பிரச்சினையில் தெளிவு கிடைக்கும் வரை தயாநிதிமாறன் அமைச்சர் பதவியில் நீடிக்கக் கூடாது. அவரை உடனடியாக நீக்க வேண்டும்.
தயாநிதி மாறன் செய்திருப்பதைப் பார்க்கும்போது எந்தளவுக்கு அதிகாரதுஷ்பிரயோகம் நடந்துள்ளது என்பது தெளிவாகிறது.
நாடு முழுவதும் நல்ல மதிப்பையும், மரியாதையையும் வைத்துள்ளது டாடாநிறுவனம்.
அப்பேர்ப்பட்ட மிகப் பெரிய சாம்ராஜ்யத்தின் அதிபரை மிரட்டுவதை ஏற்றுக் கொள்ளடியாது என்றார் ஜாவேத்கர்.
ப.சிதம்பரம் கருத்து:
இந்த விவகாரம் குறித்து மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திடம் கேட்டபோது, இதுகுறித்து தயாநிதி மாறன் விளக்கம் அளிப்பார் என்று நம்புகிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications