ஐபிஎன் லைவ் டிவியில் இன்றிரவு எக்சிட் போல்
டெல்லி:
இன்று நடக்கும் சட்டமன்றத் தேர்தல் குறித்த எக்சிட் போலை ஐபிஎன் லைவ் தொலைக்காட்சியும் இந்துநாளிதழும் இணைந்து நடத்துகின்றன.
இதன் முடிவுகளை இரவில் தொலைக்காட்சியிலும நாளை காலை இந்து நாளிதழிலும் பார்க்கலாம்.தமிழகத்தில் நடக்கும் சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு குறித்து ஐபிஎன் லைவ் தொலைக்காட்சியும் இந்துநாளிதழும் தவறான முறையில் எக்சிட் போல் நடத்துவதாக ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமிகூறியுள்ளார்.
இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு சுவாமி அனுப்பியுள்ள கடிதத்தில்,
மைலாப்பூர் லஸ் பகுதியில் வாக்குச் சாவடியில் ஐபிஎன்-இந்து எக்சிட் போல் நடத்துவோர் வாக்காளர்களிடம் ஒருமஞ்சள் நிற துண்டுச் சீட்டைத் தந்துள்ளனர்.
அதில் யாருக்கு வாக்களித்தீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த சீட்டில் ஜனதா கட்சியின்சார்பில் போட்டியிடும் சந்திரலேகாவின் பெயர் இல்லை. அதிமுக, திமுக வேட்பாளர்களின் பெயர்கள் மட்டுமேஉள்ளன.
இதனால் இந்த எக்சிட் போலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் சுவாமி.
இந்த எக்சிட் போல் முடிவுகளை இன்று இரவு ஐபிஎன் லைவ் தொலைக்காட்சியிலும் நாளை காலை இந்துநாளிதழிலும் பார்க்கலாம்.