வைகோவின் பொடா தோழர் மதிமுகவுக்கு குட்பை

Subscribe to Oneindia Tamil

மதுரை:

மதிமுக மாநில தணிக்கைக் குழு உறுப்பினரும், வைகோவுடன் 19 மாதங்கள் பொடாசட்டத்தின் கீழ் சிறையில் இருந்தவருமான பொடா நாகராஜன் கட்சியிலிருந்துவிலகியுள்ளார்.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த பஞ்சு மில் அதிபர் நாகராஜன்.மதிமுகவில் தணிக்கைக் குழு உறுப்பினராக இருந்து வந்தார். ஜெயலலிதா ஆட்சியில்வைகோ பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டபோது நாகராஜனும் கைதுசெய்யப்பட்டு 19 மாதம் சிறைவாசம் அனுபவித்தார்.

இந் நிலையில் மதிமுகவிலிருந்து விலகுவதாக நாகராஜன் அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் கூறுகையில்,

தொழிலில் தீவிர கவனம் செலுத்த வேண்டியிருப்பதால் எனது தணிக்கைக் குழுஉறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன். கட்சியின் அடிப்படைஉறுப்பினர்பொறுப்பிலிருந்தும் விலகியுள்ளேன். எனது ராஜினாமா கடிதத்தை வைகோவுக்குஅனுப்பியுள்ளேன் என்று கூறியுள்ளார் நாகராஜன்.

திருமங்கலம் தொகுதியில் சீட் கேட்டு கட்சியில் விண்ணப்பித்திருந்தார் நாகராஜன்.ஆனால் அவருக்கு சீட் கிடைக்கவில்லை. மாறாக மதுரை புறநகர் மாவட்ட செயலாளர்வீர இளவரசனுக்கு சீட் கொடுக்கப்பட்டது.

இதனால் மன வருத்தத்தில் இருந்தார் நாகராஜன். இந் நிலையில் கட்சியிலிருந்துவிலகுவதாக அறிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+