18, 19ல் பிளஸ் டூ தேர்வு முடிவுகள்-அமைச்சர்
சென்னை:
தொழில்கல்வி படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியான பின்னரேபிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று கோட்டையில் உள்ள தனது அலுவலகத்திற்குவந்து பணிகளை ஆரம்பித்தார்.அதிகாரிகளுடன் அவர் துறை குறித்து ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர்செய்தியாளர்களிடம் தங்கம் தென்னரசு பேசுகையில்,
நுழைவுத் தேர்வு முடிவுகள் 18 அல்லது 19ம் தேதி வெளியாகவுள்ளது. அதன் பிறகேபிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றார்.
வேலைகளை ஆரம்பித்த அமைச்சர்கள்:
இந் நிலையில் முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட புதிய அமைச்சர்கள் அனைவரும்இன்று காலை முதல் தங்களது பணிகளை தொடங்கினர்.
கடந்த 13ம் தேதி பதவியேற்றுக் கொண் கையோடு அனைத்து அமைச்சர்களும்கோட்டைக்கு வந்து தங்களது அறைகளுக்குச் சென்று இருக்கைகளில் அமர்ந்துஅமைச்சர் பணியில் பிள்ளையார் சுழி போட்டனர்.
இன்று காலை முதல் தங்களது பணிகளை அமைச்சர்கள் ஆரம்பித்தனர். ஒவ்வொருதுறை அமைச்சரும் அத்துறை சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுடன் ஆலோசனைடத்தினர்.
முதல்வர் கருணாநிதியும் இன்று காலை தலைமைச் செயலகம் வந்து தனதுபணிகளைத் தொடங்கினார். இன்றும் ஏராளமான திமுகவினர் அமைச்சர்களை சந்திக்கஅலை அலையாய் வந்தவண்ணம் இருந்தனர்.












Click it and Unblock the Notifications