சட்டசபை பாமக தலைவராக மணி மீண்டும் தேர்வு
சென்னை:
சட்டசபை பாமக தலைவராக ஜி.கே.மணி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பாமக எம்.எல்.ஏக்கள் கூட்டம் சென்னையில் நடந்தது. கூட்டத்திற்கு கட்சி நிறுவனர்டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள18 எம்.எல்.ஏக்களும் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் பேசிய ராமதாஸ், சட்டசபையில் எப்படி செயல்பட வேண்டும் என்பதுகுறித்து பல அறிவுரைகளை உறுப்பினர்களுக்கு வழங்கினார்.
பின்னர் முதல்வர் கருணாநிதி தேர்தல் வாக்குறுதிகளில் மூன்றை நிறைவேற்றி உத்தரவுபிறப்பித்துள்ளதற்குப் பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆளுங்கட்சிக்கு ஆதரவு கொடுக்கும் கட்சி என்றாலும் கூட, சட்டசபைக்குஉள்ளேயும், வெளியேயும் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு மக்கள் பிரச்சினைகளைஅரசின் கவனத்திற்குக் கொண்டு சென்று நிவாரணம் கிடைக்கப் பாடுபடுவது என்றுஇன்னொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் கட்சி நிர்வாகிகள் தேர்வு நடந்தது. இதில் ஜி.கே.மணி தலைவராக 2வதுமுறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
துணைத் தலைவராக திருக்கச்சூர் ஆறுமுகம், செயலாளராக பெரியசாமி,கொறடாவாக வேல்முருகன், பொருளாளராக சக்தி கமலாம்பாள் ஆகியோர் தேர்வுசெய்யப்பட்டனர்.