வேட்பாளர்களுடன் விஜயகாந்த் ஆலோசனை
சென்னை:
கடந்த இரண்டு நாட்களாக தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் போட்டியிட்டுதோல்வி அடைந்த வேட்பாளர்களிடம் கட்சித் தலைவர் விஜயகாந்த் ஆலோசனைநடத்தி வருகிறார். இன்றும் ஆலோசனை தொடர்கிறது.
விஜயகாந்த்தின் தேமுதிக 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டது. இதில்விஜயகாந்த் மட்டும் வெற்றி பெற்றார். மற்றவர்கள் தோல்வி அடைந்தனர். தோல்விஅடைந்தார்களே தவிர அதிக அளவில் வாக்குகளைப் பெற்றும், வாக்குகளைப்பிரித்தும் தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக சிறுபான்மை அரசுபதவியேற்க வழி வகுத்து விட்டது தேமுதிக.இந் நிலையில் தனது கட்சி வேட்பாளர்களுடன் விஜயகாந்த் ஆலோசனை நடத்திவருகிறார். சென்னையில் உள்ள தனது கல்யாண மண்டபத்தில் அனைத்துவேட்பாளர்களையும் மாவட்ட வாரியாக அழைத்து விஜயகாந்த் ஆலோசனைநடத்துகிறார்.
கடந்த இரண்டு நாட்களாக இந்த ஆலோசனை நடந்து வருகிறது. இன்றும் தொடர்ந்துநிடக்கிறது.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் நமது செயல்பாடுகள் என்பது குறித்து கட்சியினருடன்விஜயகாந்த் ஆலோசனை நடத்தி வருவதாகத் தெரிகிறது.
வேட்பாளர்கள் கூறும் யோசனைககைளயும் அவர் உன்னிப்பாக கேட்டுக் கொள்கிறார்.தோல்விக்கான காரணங்கள், மக்களிடையே தேமுதிக குறித்து நிலவும் கருத்துக்கள்குறித்தும் விஜயகாந்த் மற்றும் வேட்பாளர்கள் கலந்தாலோசிக்கின்றனர்.
ஒவ்வொரு வேட்பாளருக்கும் சால்வை அணிவித்து விஜயகாந்த் பாராட்டுதெரிவித்தார். மேலும் கட்சித் தலைமையிடம் பணத்தை எதிர்பார்க்காமல் சொந்தக்காசு போட்டு செலவழித்தற்கும் அவர் வேட்பாளர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.