ஜெ பாதுகாப்பு-டாடா விவகாரம்: நாடாளுமன்றத்தில் கிளப்பும் அதிமுக
டெல்லி:
தொழிலதிபர் ரத்தன் டாடாவை மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மிரட்டியாதகூறப்படும் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்புகிறது அதிமுக.
டிடிஎச் விவகாரம் தொடர்பாக டாடாவை, மத்திய அமைச்சர் தயாநிதி மாறன்மிரட்டியதாக தேர்தல் பிரசாரத்தின்போது மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டினார். இந்த விவகாரம் தேர்தலுக்கு முன்பு பெரிதாக வெடித்து பின்னர்புஸ்வானமாகிப் போனது.இந் நிலையில் இந்த விவகாரம் குறித்து ராஜ்யசபா எழுப்ப அனுமதி கோரி அதிமுகநாடாளுமன்றக் குழுத் தலைவர் பி.ஜி. நாராயணன், ராஜ்யசபா தலைவர் பைரான் சிங்ஷெகாவத்திடம் நோட்டீஸ் கொடுத்துள்ளார். ராஜ்யசபாவில் மட்டும் தான்அதிமுகவுக்கு எம்பிக்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜ்யசபாவில் திங்கள்கிழமை பூஜ்ய நேரத்தின்போது இப்பிரச்சினையை எழுப்பஅனுமதிக்க வேண்டும் என்று ஷெகாவத்திற்கு அதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த விவகாரத்தில் பாஜகவின் ஆதரவையும் அதிமுக கோரியுள்ளது. ஏற்கனவே,டாடா விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரச்சினை எழுப்புவோம் என்றுபாஜக கூறியுள்ளது நினைவிருக்கலாம்.
ஆனால் இதுவரை இந்த விவகாரம் குறித்து பாஜக எந்தப் பிரச்சனையும்எழுப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications