திமுக-காங் கூட்டணியை உடைக்க அதிமுக முயற்சி: தயாநிதி மாறன்
சென்னை:
திமுக, காங்கிரஸ் இடையே குழப்பம் ஏற்படுத்தி, கூட்டணியை உடைக்க அதிமுகமுயற்சித்து வருவதாக மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறன்குற்றம் சாட்டியுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 15வது நினைவு தினத்தையொட்டி இன்று வடசென்னை இளைஞர் காங்கிரஸ் சார்பில் ரத்ததான முகாம் நடத்தப்பட்டது. முகாமைதயாநிதி தொடங்கி வைத்தார்.அதில் தயாநிதி பேசுகையில், தமிழகத்தில் திமுக தலைமையில் நல்லாட்சி நடந்துவருகிறது. இந்த ஆட்சிக்கு காங்கிரஸ் உறுதுணையாக இருந்து வருகிறது. இதுதொடரும். இதேபோல புதுவையிலும் காங்கிரஸ் அரசுக்கு திமுக உறுதுணையாகஇருக்கிறது.
இந்தக் கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தி, பிளவு ஏற்படுத்த ஆட்சியை இழந்தவர்கள்மயற்சித்து வருகிறார்கள். ஆனால் அது தோல்வியில்தான் முடியும். இந்தக் கூட்டணிஉடையாது.
இன்னும் 6 மாதங்களில் நடைபெறப் போகும் உள்ளாட்சித் தேர்தலிலும் இந்தவெற்றிக் கூட்டணி தொடரும் என்றார் தயாநிதி மாறன்.
முன்னதாக ராஜீவ் காந்தி 15 ஆண்டுகளுக்கு முன்பு மனித வெடிகுண்டால்கொல்லப்பட்ட ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள ராஜீவ் நினைவிடத்தில் காங்கிரஸ்தலைவர் கிருஷ்ணசாமி, மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், பீட்டல்அல்போன்ஸ், தங்கபாலு உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதேபோல காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் நடந்த நிகழ்ச்சியில்ராஜீவ் படத்திற்கு காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, மத்திய அமைச்சர்கள்டி.ஆர்.பாலு, ஜி.கே.வாசன், சட்டசபை காங்கிரஸ் தலைவர் சுதர்சனம் உள்ளிட்டோர்மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.












Click it and Unblock the Notifications