ஜெ சொத்து: மீண்டும் வந்தார் நல்லம்ம நாயுடு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்கும் பொறுப்பு மீண்டும் எஸ்பிநல்லம்ம நாயுடுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கடந்த முறைக்கு முன் முதல்வராக இருந்தபோது ஜெயலலிதாவும் சசிகலாவும் வருமானத்தை மீறிசொத்துக்களைக் குவித்தனர். அவர்களது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கோடிக்கணக்கிலான வைர, தங்க,நகைகள், பணம், பட்டுப் புடவைகள், முதலீட்டுப் பத்திரங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான செருப்புகளும்கைப்பற்றப்பட்டன.

இந்த வழக்கில் விசாரணை அதிகாரியாக நல்லம்ம நாயுடு நியமிக்கப்பட்டார். விசாரணையின்போதே ஓய்வுபெற்ற இவருக்கு திமுக ஆட்சியில் பதவி நீட்டிப்பு தரப்பட்டது.

2001ல் மீண்டும் ஜெயலலிதா முதல்வரானவுடன தனது எஸ்பி பதவியை ராஜினாமா செய்தார் நாயுடு.

இதையடுத்து இந்த வழக்கு சசிகலாவுக்கு வேண்டப்பட்டவரான செளந்தர்ராஜனிடம் தரப்பட்டது. அவர் ஓய்வுபெற்ற பின்னரும் பதவி நீட்டிப்பு தரப்பட்டது.

இந் நிலையில் மீண்டும் இப்போது ஆட்சிக்கு வந்துள்ள திமுக, செளந்தர்ராஜனுக்கு கட்டாய ஓய்வு கொடுத்துவீட்டுக்கு அனுப்பியுள்ளது.

இப்போது இந்த வழக்கு மீண்டும் நல்லம்ம நாயுடுவிடமே வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை உள்துறைச்செயலாளர் பவன் ரெய்னா வெளியிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+