அதிமுகவிடம் சிம்ரன் பணம் வாங்கலையாம்!
சென்னை:
சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய நான் பணம்வாங்கியதாக கூறப்படுவது கட்டுக் கதை என்று நடிகை சிம்ரன் கூறியுள்ளார்.
சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தின்போது அதிமுகவுக்கு ஆதரவாக சென்னை நகரில்தீவிரப் பிரசாரம் செய்தார் சிம்ரன். அவ பார்க்கவும், அவர் பேசிய தமிழை கேட்கவும்பெரும் கூட்டம் கூடியது.பிரசாரத்திற்காக அதிமுகவிடமிருந்து கணிசமான தொகையை சம்பளம் போல சிம்ரன்வாங்கியதாக அப்போதே வதந்திகள் கிளம்பின. மேலும் ஒரு கூட்டத்துக்கு இவ்வளவுஎன்றும் வெட்டப்பட்டது.
அந்த செய்திகளை இப்போது மறுத்துள்ளார் சிம்ரன். சென்னையில் நடந்த ஒருநிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிம்ரன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய நான் பணம் வாங்கியதாக கூறப்படுவதில்உண்மையே இல்லை, அபத்தமான வதந்தி இது.
ஜெயலலிதா தைரியமான பெண்மணி என்று நான் நினைத்தேன். அதனால்தான்அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தேன். இது எனது தனிப்பட்ட விருப்பம்,இதில் பணம் எங்கிருந்து வந்தது?
எனக்குப் பிடித்த ஒருவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்வது அவ்வளவு பெரியபாவமா?அதிமுக இந்தத் தேர்தலில் தோல்வி அடைந்துள்ளதாக நான்நினைக்கவில்லை.
சென்னை மக்கள் அதிமுகவுக்கு சரியான வெற்றியைத் தேடித் தந்துள்ளனர்.நான் தீவிரஅரசியலில் இறங்கும் அளவக்கு வயதானவள் கிடையாது. அவ்வளவு வயதாகிவிடவில்லை எனக்கு. (இவர் சொல்லும் காரணத்தைப் பாருங்கள்)
நான் அரசியல்வாதியும் அல்ல. எனக்கு அதிமுக பிடித்திருந்தது, ஜெயலலிதாவைப்பிடித்திருந்தது. அவருக்காக பிரசாரம் செய்தேன் என்றார்.
இதையடுத்து தமிழக அரசியல், மற்றும் சிம்ரனுக்குப் பிடித்த அதிமுக குறித்த சிலஅடிப்படைக் கேள்விகளை சிம்ரனிடம் நிருபர்களிடம் கேட்கபோது, பதிலேசொல்லாமல் தப்பித்து ஓட்டமாய் ஓடிப் போனர் நடிகை.