சரியான சண்டை! சாட்சி விஜயகாந்த் அதிர்ச்சி!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அதிமுக, காங்கிரஸ் உறுப்பினர்களிடையே நடந்த சண்டையை அருகில் இருந்துபார்த்தேன் என்று நடிகர் விஜயகாந்த் கூறினார்.
சட்டசபையில் வெள்ளிக்கிழமை நடந்த பெரும் ரகளையால் அதிமுக உறுப்பினர்கள்அனைவரும் வெளியேற்றப்பட்டனர். அதன் பின்னர் சபைக் கூட்டம் தொடர்ந்துநடந்தது.இந் நிலையில் விஜயகாந்த்திடம் உள்ளே நடந்தது குறித்து செய்தியாளர்கள்கேட்டபோது,
சண்டையை அருகில் இருந்து பார்த்தேன். ஒருவருக்கொருவர் கடுமையாகவாக்குவாதம் செய்து கொண்டனர். சில மைக்குகளும் உடைக்கப்பட்டிருந்தன.காங்கிரஸ், அதிமுக உறுப்பினர்கள் இருவருமே கடுமையாக பேசிக் கொண்டனர், இருதரப்பினருமே தள்ளுமுள்ளிலும் ஈடுபட்டனர்.
அந்த இடமே போர்க்களம் போல காணப்பட்டது. பல மைக்குகள்சேதமடைந்திருந்தன. புதிய உறுப்பினர்களான எங்களுக்கு இது அதிர்ச்சியாகஇருந்தது. இந்த ரசாபாசத்தைத் தவிர்த்திருக்கலாம். சரியான சண்டை என்று கூறினார்.ஆனால், தவறு யார் மீது என்று சொல்லவில்லை.
விவரமான கேப்டன்.












Click it and Unblock the Notifications