காவிரி-பெங்களூரில் இன்று அனைத்து கட்சி கூட்டம்
பெங்களூர்:
காவிரி பிரச்சினை தொடர்பாக பெங்களூரில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்குகர்நாடக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
தமிழகம், கர்நாடகம், கேரளம், புதுவை ஆகிய நான்கு மாநிலங்கள் சம்பந்தப்பட்டகாவிரி நதி நீர்ப் பிரச்சினையைத் தீர்க்க அமைக்கப்பட்டுள்ள காவிரி நடுவர் மன்றம்,தனது இறுதித் தீர்ப்பினை விரைவில் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந் நிலையில் சில வாரங்களுக்கு முன் கூடிய காவிரி நடுவர் மன்றம், நான்குமாநிலங்களிலும் காவிரிப் பாசனப் பகுதிகளில் உள்ள பயிர் சாகுபடி முறைகள்,நீர்ப்பாசனத் தேவைகள் ஆகியவற்றை ஆய்வு செய்ய புதிய நிபுணர் குழுவைஅமைக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு நான்கு மாநிலங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதைத்தொடர்ந்து இந்த உத்தரவை நடுவர் மன்றம் வாபஸ் பெற்றது.
இருப்பினும் நான்கு மாநில பயிர் சாகுபடி முறைகள் உள்ளிட்ட விவரங்கள் குறித்துஏற்கனவே சேகரிக்கப்பட்டுள்ள விவரங்களை நான்கு மாநில அரசுகளுக்கும் அனுப்பிவைக்க நடுவர் மன்றம் உத்தரவிட்டது.
அதன்படி நான்கு மாநில அரசுகளுக்கும் இந்த விவரங்கள் அனுப்பப்பட்டுள்ளன.இதுகுறித்து விவாதிக்க கர்நிாடக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை பெங்களூரில்இன்று கூட்டியுள்ளது.
முதல்வர் குமாரசாமி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் முக்கிய கட்சிகள்அனைத்தும் கலந்து கொள்ளவுள்ளன.












Click it and Unblock the Notifications